என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பெண்களுக்கு வேலை நேர சலுகைஅறிவிப்பு அரசியல் கபட நாடகம்
    X

    கோப்பு படம்.

    பெண்களுக்கு வேலை நேர சலுகைஅறிவிப்பு அரசியல் கபட நாடகம்

    • மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு குற்றச்சாட்டு
    • அனைத்து மத பண்டிகைகளுக்கும் மதிப்பளித்து தேசிய விடுமுறை, பண்டிகை விடுமுறைகள் அறிவிக்கப்படுகிறது.

    புதுச்சேரி:

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் புதுவை பிரதேச செயலாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை அரசின் பணியாளர், நிர்வாக சீர்திருத்த துறை வெளியிட்டுள்ள அரசாரணையில், வழிபாடு மற்றும் பூஜை செய்வதற்காக வெள்ளிக்கிழமையில் காலை 8. 45 முதல் 10 .45 மணி நேரம் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    கல்வி, காவல், சுகாதார துறைகளுக்கு பொருந்தாது. சுழற்சி முறையில் சிறப்பு அனுமதி வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கவர்னர், முதல்-அமைச்சர் தங்கள் பேட்டிகளில் வீட்டை சுத்தம் செய்வது உட்பட பணிக்காக என குறிப்பிட்டுள்ளனர்.

    இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் அனைத்து மத வழி பாட்டு உரிமைகளை மதிக்கிறது. அனைத்து மத பண்டிகைகளுக்கும் மதிப்பளித்து தேசிய விடுமுறை, பண்டிகை விடுமுறைகள் அறிவிக்கப்படுகிறது. இவைகள் எல்லாம் கவனத்தில் கொண்டதாக அரசின் உத்தரவு அமைய

    வில்லை. மாதத்தில் 3 நாட்கள் 2 மணி நேர சலுகை பெண்கள் நலன் சார்ந்ததாக அமையவில்லை.

    இது உள்நோக்கம் கொண்ட அரசியல் கபடநாடக அறிவிப்பாகும். பெண்கள் நலனில் அக்கறை இருந்தால் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 6 மணி நேரமாக குறைக்க வேண்டும். மக்கள் ஒற்றுமையை சிதைக்கும், மதவாத நிகழ்ச்சி நிரலுக்கு இடம் அளிக்கக்கூடாது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×