என் மலர்
புதுச்சேரி

சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள்
சாலையை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்படுவதாக புகார்
- கடலூர்-புதுவை ரோடு பிள்ளையார் குப்பத்திலிருந்து பின்னாச்சிகுப்பம் பகுதி பாகூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிக்கு முக்கிய சாலையாக இருந்து வருகிறது.
- இது சம்பந்தமாக போக்குவரத்து துறை மற்றும் கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசருக்கு புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
புதுச்சேரி:
கடலூர்-புதுவை ரோடு பிள்ளையார் குப்பத்திலிருந்து பின்னாச்சிகுப்பம் பகுதி பாகூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிக்கு முக்கிய சாலையாக இருந்து வருகிறது.
இச்சாலை ஓரத்தில் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் மாணவர்கள் சாலை ஓரத்தில் இரு புறங்களிலும் தங்களது வாகனங்களை நிறுத்தி விடுகின்றனர்.
இதனால் பாகூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து வரும் மக்களுக்கு போக்குவரத்து இடையூறு அவ்வப்போது ஏற்படுகிறது.
இது சம்பந்தமாக போக்குவரத்து துறை மற்றும் கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசருக்கு புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் அரசு உயர் அதிகாரிகள் இதில் கவனம் செலுத்தி சாலை ஓரத்தில் வாகனங்களை நிறுத்தாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






