search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    தலைமை செயலர் மீது மத்திய அரசிடம் புகார்
    X

    கோப்பு படம்.

    தலைமை செயலர் மீது மத்திய அரசிடம் புகார்

    • சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தகவல்
    • அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் தலைமை செயலரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

    புதுச்சேரி:

    புதுவை நிதி, சுகாதாரம், தேர்தல் துறைகளை வைத்திருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜவகரிடம் இருந்து தேர்தல் தவிர பிற துறைகள் பறிக்கப்பட்டு புதிய ஐ.ஏ.எஸ். அதிகாரி மோரே வசம் ஒப்படைக்கப்பட்டது.

    முதல்-அமைச்சரிடம் ஆலோசிக்காமல் தலைமை செயலர் தன்னிச்சையாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் ஆவேசமடைந்தனர்.

    இதையடுத்து சபாநாயகர் செல்வம், தலைமை செயலரை அழைத்து பேசினார். அப்போது அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் தலைமை செயலரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

    இந்த நிலையில் தலைமை செயலர் திடீரென டெல்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளார். இதுகுறித்து சபாநாயகர் செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவை அரசின் ஒப்புதலின்றி ஜவகர் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் பொறுப்புகள் மாற்றப்பட்டது. தலைமை செயலரிடம் கேட்டபோது, முதல்-அமைச்சருக்கு தகவல் தெரிவித்ததாக பொய்யான தகவலை கொடுத்தார்.

    இதுகுறித்து விளக்கம் கேட்டு சட்டசபை செயலகம் மூலம் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. அவர் இதுவரை விளக்கம் தரவில்லை. அவர் இதுவரை சட்டசபை செயலக புகாருக்கு விளக்கம் தராதது குறித்து மத்திய அரசிடம் புகார் தெரிவிக்கப் பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.


    Next Story
    ×