என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
வெளிநாட்டுக்காரரிடம் பணம் மோசடி ஊர்க்காவல்படை வீரர் மீது புகார்
- போக்குவரத்து விதி மீறியதாக குறிப்பிட்ட தொகையை அபராதம் எனக்கூறி கூகுள் பே மூலம் பெற்றுள்ளனர்.
- தனது நண்பரான ஊர்க்காவல் படை வீரருடன் சேர்ந்து வெளி நாட்டுக்காரரிடம் பணம் பறித்தது தெரியவந்துள்ளது.
புதுச்சேரி:
புதுவை காவல்துறையில் பணிபுரியும் போலீசார், ஊர்க்காவல் படையினர் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர்.
போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கின்றனர். அப்போது பணம் இல்லாதவர்களிடம் கூகுள் பே செயலி மூலம் அபராதம் வசூலிக்கின்றனர். இந்த பணத்தை காவல்துறையின் கணக்கிற்கு அவர்கள் கொண்டுசெல்வது கிடையாது.
தங்கள் உறவினர்கள், நண்பர்களின் எண்ணில் கூகுள்பே செலுத்தும்படி கூறி பணத்தை அபகரித்து வருகின்றனர். இவ்வாறு பணத்தை சுருட்டிய சிலர் மீது துறைரீதியில் விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில் கருவடிக்குப்பம் பகுதியில் வெளிநாட்டுக்காரர் ஒருவரிடம் இதுபோல் மோசடி நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்தன்று நள்ளிரவு கருவடிக்குப்பம் சிவாஜி சிலை அருகே சிலர் அவ்வழியே வந்த வெளிநாட்டுக்காரர் வாகனத்தை மடக்கி போலீஸ் எனக்கூறி விசாரித்துள்ளனர். அப்போது அவரிடம் போக்குவரத்து விதி மீறியதாக குறிப்பிட்ட தொகையை அபராதம் எனக்கூறி கூகுள் பே மூலம் பெற்றுள்ளனர்.
மறுநாள் அவர் தெரிந்தவர்கள் மூலம் லாஸ்பேட்டை போலீஸ் நிலையத்தில் முறையிட்டார்.
அவர் பணம் அனுப்பி செல்போன் எண்ணை வைத்து விசாரித்தபோது அந்த நபர் கருவடிக்குப்பத்தில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர் என தெரிந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில், தனது நண்பரான ஊர்க்காவல் படை வீரருடன் சேர்ந்து வெளி நாட்டுக்காரரிடம் பணம் பறித்தது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து போலீசார், ஊர்க்காவல் படை வீரர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்