search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை
    X

    முற்றுகையில் ஈடுபட்ட கம்யூனிஸ்டு கட்சியினர்.

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை

    • மின் துறை தலைமை பொறியாளர் சண்முகம் அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி னார்.
    • போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி மாநில துணை செயலாளர் சேது செல்வம் தலைமை வகித்தார்.

    புதுச்சேரி:

    காமராஜர் நகர் தொகுதி கவிக்குயில் நகரில் 4-வது குறுக்கு தெரு முதல் 9-வது குறுக்கு வீதி வரை சுமார் 250 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    தொடர் மின் தடை

    இந்த பகுதியில் 2000-ம் ஆண்டு முதல் தொடர் மின் தடை, குறைந்த மின் அழுத்தம் ஏற்பட்டு வருகிறது. இதனால் மாணவர்கள் படிக்க முடியவில்லை. மின்சாதன பொருட்கள் அடிக்கடி பழுதானது. இதுகுறித்து பல முறை புகார் அளித்தும் எந்த நடவடி க்கையும் எடுக்க வில்லை.

    இதைய டுத்து இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி தலைமையில் மின்துறை தலைமை அலுவல கத்தை முற்றுகை யிட்டு பொது மக்கள் இன்று போராட்டம் நடத்தினர். இதையடுத்து மின் துறை தலைமை பொறியாளர் சண்முகம் அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி னார்.

    அப்போது, ஒரு வாரத்தி ற்குள் மின் கம்பிகள் பொ ருத்தி மின் இணைப்புகள் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தார். இதையடுத்து போராட்டம் கைவிட ப்பட்டது. போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி மாநில துணை செயலாளர் சேது செல்வம் தலைமை வகித்தார்.

    காமராஜர் நகர் தொகுதி செயலாளர் துரை செல்வம், துணை செயலாளர் தயாளன், பொருளாளர் பிரகாஷ், தட்டாஞ்சாவடி தொகுதி செயலாளர் தென்னரசன், கவிக்குயில் நகர் செல்லப்பெருமாள், வேலழகன், முருகேசன், ரமேஷ், கிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×