என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கல்லூரி பேராசிரியர்கள் விடிய, விடிய போராட்டம்
    X

    விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி பேராசிரியர்கள் 

    கல்லூரி பேராசிரியர்கள் விடிய, விடிய போராட்டம்

    • புதுவை அரசு கல்லூரிகளில் பணியாற்றும் உதவி பேராசிரியர்களுக்கு 15 ஆண்டாக பதவி உயர்வு வழங்கவில்லை.
    • 7-வது ஊதியக்குழு நிலுவைத்தொகையும் வழங்கவில்லை. கோரிக்கை களை வலியுறுத்தி பல கட்ட போராட்டம் நடத்தியும் அரசு கண்டுகொள்ளவில்லை

    புதுச்சேரி:

    புதுவை அரசு கல்லூரிகளில் பணியாற்றும் உதவி பேராசிரியர்களுக்கு 15 ஆண்டாக பதவி உயர்வு வழங்கவில்லை.

    7-வது ஊதியக்குழு நிலுவைத்தொகையும் வழங்கவில்லை. கோரிக்கை களை வலியுறுத்தி பல கட்ட போராட்டம் நடத்தியும் அரசு கண்டுகொள்ளவில்லை. இதை கண்டித்து அரசு கலை, அறிவியல் கல்லூரி பேராசிரியர்கள் கருப்பு பட்டை அடைந்து முதல் கல்லூரிரிகளின் வாசல் முன்பு போராட்டத்தை தொடங்கினர்.

    4 பிராந்தியத்தில் உள்ள 7 கல்லூரிரிகளை சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் போராட்ட த்தில் பங்கேற்றனர். இரவு முழுவதும் கல்லூரி வளாகத்திலேயே தங்கிய பேராசிரியர்கள் கஞ்சி காய்ச்சி சாப்பிட்டனர். புதுவை பாரதிதாசன் கல்லூரியில் கொசுவலை அமைத்து அதற்குள் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

    கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை பணிகளுக்கு நடுவே போராட்டத்தை தொடர்வோம் என பேராசிரியர்கள் அறிவித்துள்ளனர். இதன்படி 2-வது நாளாக இன்றும் போராட்டம் தொடர்கிறது.

    Next Story
    ×