search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    முதிர் நோயாளிகளுக்கான பயிற்சி முகாம்
    X

    பயிற்சி முகாமை தொடங்கி வைத்த காட்சி.

    முதிர் நோயாளிகளுக்கான பயிற்சி முகாம்

    • ஆறுபடை வீடு மருத்துவ கல்லூரி மற்றும் திருவனந்தபுரம் பேலியம் இந்தியா இணைந்து முதிர் நோயாளிகளுக்கான ஆதரவு மருத்துவம் குறித்து 10 நாட்கள் பயிற்சி முகாம் நடத்தியது.
    • முகாமில் புதுவையை சேர்ந்த ஏராளமான டாக்டர்கள், நர்சுகள் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    ஆறுபடை வீடு மருத்துவ கல்லூரி மற்றும் திருவனந்தபுரம் பேலியம் இந்தியா இணைந்து முதிர் நோயாளிகளுக்கான ஆதரவு மருத்துவம் குறித்து 10 நாட்கள் பயிற்சி முகாம் நடத்தியது.

    முகாமில் புதுவையை சேர்ந்த ஏராளமான டாக்டர்கள், நர்சுகள் கலந்து கொண்டனர். ஆறுபடை வீடு மருத்துவ கல்லூரி வளாகத்தில் புதுவை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனர் டாக்டர் அனந்தகிருஷ்ணன், மார்பின் வேதியல் வகையறா மருந்துகள் மருத்துவமனைகளில் எளிமையாக வாங்குவதற்கான வழிமுறை களை விளக்கினார்.

    இதில் ஏனைய மருத்துவ கல்லூரி பிரதிநிதிகள், மருந்து விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர். ஆறுபடை வீடு மருத்துவமனையில் முதிர் நோயாளிகளுக்கான ஆதரவு மருத்துவ மையத்தை பேலியம் இந்தியாவின் இயக்குனர் பத்மஸ்ரீ டாக்டர் ராஜகோபால் திறந்து வைத்தார். விநாயகா மிஷன் நிர்வாகத்தின் உறுப்பினர் சுரேஷ் சாமுவேல் மற்றும் விநாயகா மிஷன் பல்கலைக்கழக இணை வேந்தர் டாக்டர் சுதீர், கல்லூரி முதல்வர் கோட்டூர், மருத்துவ கண்காணிப்பாளர் ஜெயசிங், டாக்டர்கள் எழில் ராஜன், ஜெயகுமார், தீபா மற்றும் நர்சுகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இறுதியில் டாக்டர் சுரேஷ் ராஜ்குமார் நன்றி கூறினார். பயிற்சி முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றி தழ்கள் வழங்கப்பட்டது.

    Next Story
    ×