search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    குழந்தைகள் தின விழா
    X

    முத்து ரத்தினம் அரங்கம் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் விழா தின கொண்டாப்பட்ட காட்சி.

    குழந்தைகள் தின விழா

    • புதுவை கவுண்டன்பாளையம் முத்து ரத்தினம் அரங்கம் மேல் நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.
    • விழாவில் பள்ளி முதல்வர் கவிதா சுந்தர்ராஜன், மூத்த அலுவலக அதிகாரி மரிய ஸ்டெல்லா, ஆலோசகர் ரத்தின பிரபா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி

    புதுவை கவுண்டன்பாளையம் முத்து ரத்தினம் அரங்கம் மேல் நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி உள்விளையாட்டு அரங்கில் நடந்த இவ்விழாவுக்கு பள்ளி தாளாளர் டாக்டர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார்.

    சிறப்பு விருந்தினராக அன்னை தெரசா பட்ட மேற்படிப்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் செவிலியர் பள்ளி முதல்வர் பிரமிளா தமிழ்வாணன் கலந்து கொண்டு பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவித்தார். டாக்டர் ரங்கநாயகி ரத்தினவேல், காமராஜன், ஊர் தலைவர் ஜெகதீஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    புதுவை மாநில கோஜூரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

    விழாவில் பள்ளி முதல்வர் கவிதா சுந்தர்ராஜன், மூத்த அலுவலக அதிகாரி மரிய ஸ்டெல்லா, ஆலோசகர் ரத்தின பிரபா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பள்ளியில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று இனிப்புகள் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×