search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு 20 ரூபாய் நோட்டு மாலை அணிவித்து வாழ்த்து
    X

    முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு முன்னாள் வாரிய தலைவர் பாலமுருகன் தலைமையில் என்.ஆர்.காங்கிரசார் ரூபாய் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்த காட்சி.

    முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு 20 ரூபாய் நோட்டு மாலை அணிவித்து வாழ்த்து

    • முதல்-அமைச்சருக்காக சென்னையில் இந்த மாலை தயாரிக்கப்பட்டுள்ளது.
    • 20 ரூபாய் நோட்டுக்களை 6 தொழிலாளர்கள் 3 நாட்களாக இந்த மாலையை உருவாக்கினர்.

    புதுச்சேரி:

    முதல்-அமைச்சர் ரங்க சாமிக்கு இன்று பிறந்தநாள். பிறந்தநாளையொட்டி முதல்-அமைச்சர் ரங்கசாமி கோரிமேட்டில் உள்ள அவரது வீட்டில் காலை 7 மணி முதல் ஏராளமான பொது மக்களும் அரசியல் பிரமுகர்களும் கட்சியினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    இதில் கணுவாப்பேட்டை பகுதியை சேர்ந்த முன்னாள் வாரிய தலைவரும், மேற்கு மாவட்ட என்ஆ.ர். காங்கிரஸ் தலைவருமான பாலமுருகன் 20 ரூபாய் நோட்டுக்களை கொண்டு மாலையை முதல்- அமைச்சர் ரங்கசாமிக்கு அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

    அவருடன் என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள் மோகன்தாஸ் , தங்கராசு, எழில் அய்யனர், ஆறுமுகம், சபரி இளங்கோ உள்ளிட் டோரும் உடன் சென்று ரங்கசாமிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    முதல்-அமைச்சருக்காக சென்னையில் இந்த மாலை தயாரிக்கப்பட்டுள்ளது. 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 20 ரூபாய் நோட்டுக்களை 6 தொழிலாளர்கள் 3 நாட்களாக இந்த மாலையை உருவாக்கினர்.

    மேலும் ஏலக்காய் மற்றும் பாதமை கொண்டு உருவாக்கப்பட்ட மாலை ஒன்றையும் முதல்- அமைச்ச ருக்கு தொண்டர்கள் அணி வித்தனர்.

    Next Story
    ×