என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
திருக்காமீஸ்வரர் கோவிலில் தேரோட்டம்
- கவர்னர் தமிழிசை தேரோட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
- விழா ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அதிகாரி திருவரசன் தலைமையில் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.
புதுச்சேரி:
வில்லியனூர் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவிலில் வருகிற 1-ந் தேதி தேர் திருவிழா நடக்கிறது.
இதையொட்டி கடந்த 15-ந் தேதி பிடாரியம்மனுக்கு காப்பு கட்டப்பட்டது. 8 மணிக்கு சிவனடியார்கள், சிவாச்சாரியார்கள் மந்திரம் முழங்க பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நடந்தது.
நாள்தோறும்காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு வீதியுலாவும் நடக்கிறது.
27-ந் தேதி பாரிவேட்டை, 29-ந் தேதி 63 நாயன்மார் வீதியுலா, 31-ந் தேதி இரவு திருக்கல்யாணம் நடக்கிறது.
வருகிற 1-ந் தேதி தேர் திருவிழா நடக்கிறது. கவர்னர் தமிழிசை தேரோட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கின்றனர். விழா ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அதிகாரி திருவரசன் தலைமையில் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.
Next Story






