search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    தனியார் நிறுவன ஊழியரிடம்  செல்போன் பறிப்பு
    X

    கோப்பு படம்.

    தனியார் நிறுவன ஊழியரிடம் செல்போன் பறிப்பு

    • புதுவை தவளக்குப்பம் அருகே அபிஷேகபாக்கம் புதுநகரை சேர்ந்தவர் பிரபுதாஸ்
    • புதுவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்

    புதுச்சேரி:

    புதுவை தவளக்குப்பம் அருகே அபிஷேகபாக்கம் புதுநகரை சேர்ந்தவர் பிரபுதாஸ். இவர் புதுவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து அபிஷேகப்பாக்கம்-உருவையாறு ரோட்டில் செல்போனில் பேசியபடியே வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அங்குள்ள கருமகாரிய கொட்டகை அருகே வந்த போது ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் பிரபுதாசை தடுத்து நிறுத்தி வில்லியனூருக்கு வழி கேட்டனர்.

    பிரபுதாஸ் வழி சொல்லிக்கொண்டிருந்த போது திடீரென அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காட்டி பிரபுதாசிடம் செல்போனை கொடுத்து விடு இல்லையென்றால் வெட்டி கொலை செய்து விடுவோம் என்று மிரட்டினர். இதனால் பயந்து போன பிரபுதாஸ் செய்வதை அறியாமல் தவித்தார். உடனே அந்த கும்பல் பிரபுதாசிடமிருந்து செல்போனை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டது.

    இதையடுத்து செல்போனை பறிகொடுத்த பிரபுதாஸ் தவளக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அங்குள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து செல்போனை பறித்து சென்ற கும்பலை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    Next Story
    ×