search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    தேசிய ஒற்றுமை தின விழா கொண்டாட்டம்
    X

    தேசிய ஒற்றுமை தின விழா கொண்டாட்டம் நடந்த போது எடுத்த படம்.

    தேசிய ஒற்றுமை தின விழா கொண்டாட்டம்

    • சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாளை முன்னிட்டு தேசிய ஒற்றுமை தின விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
    • நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் விரிவுரையாளர் ஜெயந்தி, பள்ளியின் பொறுப்பாளர் ஜஸ்டின், பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை கவுண்டன் பாளையம் முத்து ரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நல பணி திட்டம் சார்பில் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாளை முன்னிட்டு தேசிய ஒற்றுமை தின விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    விழாவிற்கு பள்ளியின் தாளாளர் டாக்டர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார்.

    சிறப்பு விருந்தினராக புதுச்சேரி மாநில கோஜூரி யோ கராத்தே சங்க மாநிலச் செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் ஒற்றுமை தின விழா விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மாணவர்கள் ஒற்றுமை தின விழாவின் உறுதி மொழியை ஏற்றனர்.

    மேலும் பிரதமர் மோடி சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாள் நிகழ்ச்சியினை காணொளி மூலம் நாட்டு நல பணி திட்டம் மாணவர்கள் கண்டு களித்தனர். பள்ளி முதல்வர் கவிதா சுந்தர்ராஜன், பள்ளியின் துணை முதல்வர் வினோலியா டேனியல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் விரிவுரையாளர் ஜெயந்தி, பள்ளியின் பொறுப்பாளர் ஜஸ்டின், பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×