search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    சர்வதேச மகளிர் தினம் கொண்டாட்டம்
    X

    விநாயகா மிஷன் ஸ்கூல் ஆப் ‌அலைடுல்த் சயின்ஸ் துறை‌யில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்ட போது எடுத்த காட்சி.

    சர்வதேச மகளிர் தினம் கொண்டாட்டம்

    • மகளிர் அதிகார அமைப்பு மற்றும் கல்லூரியின் மாணவர் அமைப்பும் இணைந்து சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடினர்.
    • இந்நிகழ்ச்சியில் இசை,நடனம், கவிதை மற்றும் பேச்சுப் போட்டி நடைபெற்றது.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    ஆறுபடைவீடு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஸ்கூல் ஆப் அலைடுல்த் சயின்ஸ் துறையின் மகளிர் அதிகார அமைப்பு மற்றும் கல்லூரியின் மாணவர் அமைப்பும் இணைந்து சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடினர்.

    அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை டீன் பேராசிரியர் டாக்டர் செந்தில் குமார் ஆலோசனையின் படி, இயக்குநர் (பொறுப்பு) ஆண்ட்ரு ஜான் தலைமை தாங்கி வரவேற்புரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பாகூர் பேராசிரியர் அண்ணுசாமி பள்ளியின் முதல்வர் டாக்டர் நீலம் அருள்செல்வி கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் இசை,நடனம், கவிதை மற்றும் பேச்சுப் போட்டி நடைபெற்றது.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது. முடிவில் கல்லூரியின் விரிவுரையாளர் தமிழ்செல்வன் நன்றி உரை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் 400-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் பங்குபெற்றனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி சந்துரு, கல்லூரியின் அனைத்து ஆசிரியர்கள், மாணவர் சபை மாணவ-மாணவிகள் மற்றும் நாட்டு நலப் பணித்திட்ட , சுற்றுச்சூழல் அமைப்பின் மாணவ- மாணவிகள் மற்றும் கல்லூரியின் இளைஞர் அமைப்பு மாணவ-மாணவிகள் மற்றும் நுண்கலை மாணவ-மாணவிகள் செய்திருந்தனர்.

    Next Story
    ×