search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடு குறித்து சி.பி.ஐ.விசாரணை நடத்த வேண்டும்
    X

    கோப்பு படம்.

    ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடு குறித்து சி.பி.ஐ.விசாரணை நடத்த வேண்டும்

    • ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடுகள் குறித்து கேட்ட ஆளும் அரசுக்கு ஆதரவான சுயேச்சை எம்.எல்.ஏ. மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
    • எதிர்கட்சியாக இருந்தாலும் அவர்களின் கருத்தை கேட்க வேண்டும் என காங்கிரஸ் அரசு நினைத்தது.

    புதுச்சேரி:

    புதுவை காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடுகள் குறித்து கேட்ட ஆளும் அரசுக்கு ஆதரவான சுயேச்சை எம்.எல்.ஏ. மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இது மிக கொடுமையான செயல். முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி ஆட்சியின்போது கவர்னராக இருந்த கிரண்பேடியை எதிர்த்து பேசிய அன்பழகன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    அவரின் குரல் ஒலிக்க வேண்டும். எதிர்கட்சியாக இருந்தாலும் அவர்களின் கருத்தை கேட்க வேண்டும் என காங்கிரஸ் அரசு நினைத்தது.

    மோடியை எதிர்த்து பேசினால் எப்படி வழக்கு தொடர்வாரோ? அதே போல புதுவை ஆட்சியா ளர்கள் நடந்து கொள்கின்ற னர். இது மக்கள் குரலை நசுக்கும் செயல். புதுவையில் மின்தடை யால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டு உள்ளது. கிராமப்புறங்களில் காற்று அடித்தால் மின் இணைப்பு துண்டிக்கப்படு கிறது. இவற்றை கவனிக்க அரசு தவறுகிறது. தவறை சுட்டிக்காட்டும் எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    புதுவையில் ரங்கசாமி, நமச்சிவாயம் ஆகியோர் 2 மோடிகளாக செயல்படு கின்றனர். புதுவை மக்களின் குரலை ஒடுக்குகின்றனர். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு ஊழல், முறைகேடு கள் உள்ளது. பல திட்டங்களை நடைமுறைப்படுத்தவில்லை.

    இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த கடிதம் எழுத உள்ளேன். தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்-அமைச்சர் ரங்கசாமி செய்யும் தவறுகளுக்கு கவர்னர் உறுதுணையாக உள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×