என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மயிலம் நர்சிங் கல்லூரியில் தீபம் ஏற்றி உறுதி மொழி
    X

    மாணவர்கள் தீபம் ஏற்றி உறுதிமொழி எடுத்துக் கொண்ட காட்சி.

    மயிலம் நர்சிங் கல்லூரியில் தீபம் ஏற்றி உறுதி மொழி

    • மயிலம் கல்வி குழுமத்தின் ஒரு அங்கமான மயிலம் நர்சிங் கல்லூரி மற்றும் துணை நர்சிங் மருத்துவ பிரிவில் படிக்கும் மாணவர்களுக்காக பிளாரன்ஸ் நைட்டிங்கேலால் உருவாக்கப்பட்ட உறுதிமொழியை முதலாம் ஆண்டு மாணவர்கள் தீபம் ஏற்றி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
    • மயிலம் நர்சிங் கல்லூரி முதல்வர் தமிழ்செல்வி வரவேற்று பேசினார்.

    புதுச்சேரி:

    மயிலம் கல்வி குழுமத்தின் ஒரு அங்கமான மயிலம் நர்சிங் கல்லூரி மற்றும் துணை நர்சிங் மருத்துவ பிரிவில் படிக்கும் மாணவர்களுக்காக பிளாரன்ஸ் நைட்டிங்கேலால் உருவாக்கப்பட்ட உறுதிமொழியை முதலாம் ஆண்டு மாணவர்கள் தீபம் ஏற்றி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    மயிலம் சுப்பிரமணிய சாமி கல்வி அறக்கட்டளை தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன், துணை தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் ஆகியோரின் வழிகாட்டுதலில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் சிறப்பு விருந்தினராக விழுப்புரம் சுமதி மருத்துவமனை தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் பெனட் ராஜ் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் மேரி புனிதா பெனட் ராஜ் ஆகிேயார் கலந்து கொண்டனர்.

    மயிலம் நர்சிங் கல்லூரி முதல்வர் தமிழ்செல்வி வரவேற்று பேசினார். இயக்குனர் செந்தில் சிறப்புரையாற்றினார். விழாவில் மயிலம் என்ஜினீயரிங் கல்லூரி முதல்வர் ராஜப்பன் மயிலம் இன்ஸ்டிடியூட் ஆப் ஓட்டல் மானேஜ்மண்டின் முதல்வர் பாலகிருஷ்ணன் மற்றும் மயிலம் கல்வி குழுமத்தின் அனைத்து துறை தலைவர்களும் , பேராசிரிகளுகம், மாணவ-மாணவிகளின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

    முடிவில் மயிலம் நர்சிங் கல்லூரி துணை பேராசிரியர் மாலதி நன்றி கூறினார்.

    Next Story
    ×