search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பஸ் கண்டக்டரை தாக்கி கொலை மிரட்டல்
    X

    கோப்பு படம்.

    பஸ் கண்டக்டரை தாக்கி கொலை மிரட்டல்

    • டைமிங் தகராறில் தனியார் பஸ் கண்டக்டரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • மேலும் தகாத வார்த்தைகளால் திட்டி கையில் வைத்திருந்த கருங்கல்லாலும், இரும்பு கம்பியாலும் மதன்ராஜை சரமாரியாக தாக்கினர்.

    புதுச்சேரி:

    டைமிங் தகராறில் தனியார் பஸ் கண்டக்டரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வில்லியனூர் ஜி.என்.பாளையம் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் மதன்ராஜ் (வயது29). இவர் தனியார் பஸ்சில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று மாலை இவர் புதுவை பழைய பஸ் நிலையத்தில் இருந்து பஸ்சில் பயணிகளை ஏற்றிக்கொண்டு மதகடிப்பட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

    அரியூர் அனந்தபுரம் பஸ் நிறுத்தத்தில் பஸ்சை நிறுத்தி பயணிகளை இறக்கி கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் பஸ்சை நிறுத்தி கண்டக்டர் மதன்ராஜியிடம் எங்களது பஸ் டைமில் எப்படி நீ பஸ்சில் பயணிகளை ஏற்றி செல்லலாம் என கூறி தகராறு செய்தனர்.

    மேலும் தகாத வார்த்தைகளால் திட்டி கையில் வைத்திருந்த கருங்கல்லாலும், இரும்பு கம்பியாலும் மதன்ராஜை சரமாரியாக தாக்கினர். அதோடு இனிமேல் எங்களது பஸ் டைமில் தலையிட்டால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டி விட்டு சென்றனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் தாக்குதலில் காயமடைந்த மதன்ராஜை மீட்டு சிகிச்சைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்ற மதன்ராஜ் பின்னர் இதுகுறித்து வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மதன்ராஜை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×