search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பா.ஜ.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
    X

    மாநில தலைவர் சாமிநாதன் தலைமையில் பா.ஜ.கவினர் வெற்றியை கொண்டாடிய காட்சி.

    பா.ஜ.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

    • வெங்கட்டா நகரில் உள்ள தனியார் மகாலில் நடந்த முகாமை மாநிலத் தலைவர் சாமிநாதன் தொடங்கி வைத்தார்.
    • பா.ஜனதா மகளிர் அணி மாநில தலைவி ஜெயலட்சுமி தலைமை தாங்கினார்.

    புதுச்சேரி:

    பா.ஜனதா மகளிர் அணியினருக்கான பயிற்சி முகாம் 3 நாள் நடந்தது. வெங்கட்டா நகரில் உள்ள தனியார் மகாலில் நடந்த முகாமை மாநிலத் தலைவர் சாமிநாதன் தொடங்கி வைத்தார்.

    பா.ஜனதா மகளிர் அணி மாநில தலைவி ஜெயலட்சுமி தலைமை தாங்கினார். சமூக வலைதளங்களை பயன்படுத்தும் முறை, பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை சட்ட ரீதியாக எதிர்கொள்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், முகாமில் யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. புதுவை பா.ஜனதா பொதுச்செயலாளர் மோகன் குமார், மகளிர் அணி பொறுப்பாளர் ராமலிங்கம் எம்.எல்.ஏ., பயிற்சியாளர்கள் பிரிவு இணை அமைப்பாளர் சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    தேசிய மகளிர் அணி செயலாளர்கள் பத்மஜா மேனன், ஜஸ்வர்யா விஷ்வாஷ், தேசிய மகளிர் அணி சமூக வலைதள பொறுப்பாளர் சுஜாதா பட்டேல், சட்ட ஆலோசகர்மேரி அன்னா தயாவதி, தமிழ்நாடு பா.ஜனதா செயலாளர் சூரியா உள்ளிட்டோர் பயிற்சி அளித்தனர். முகாம் பொறுப்பாளராக மாநில துணைத் தலைவி மாநில துணைத் தலைவி கீதா, இணை பொறுப்பாளராக அமுதா ராணி ஆகியோர் செயல்பட்டனர்.

    தேசிய ஜனநாயக கூட்டணி ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு வெற்றி பெற்றதை முன்னிட்டு இந்திரா காந்தி சிலை அருகே வெற்றி கொண்டாட்டம் நடைபெற்றது. இதையொட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் மாநில தலைவர் சாமிநாதன், மாநில பொது செயலாளர் மோகன் குமார், அசோக் பாபு எம்.எல்.ஏ. துணைத் தலைவர் தங்க விக்ரமன், மாநில செயலாளர்கள் அகிலன், லதா, ஜெயந்தி, உழவர்கரை மாவட்ட தலைவர், நாகேஷ்வரன், மாநில பட்டியல் அணி தலைவர், தமிழ்மாறன், விவசாய அணி தலைவர் புகழேந்தி, இளைஞர் அணி தலைவர் கோவேந்தன் கோபதி, மாநில கூட்டுறவு பிரிவு அமைப்பாளர் வெற்றி செல்வம் என பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×