search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதிய ஆழ்துளைக் கிணறு அமைக்க பூமி பூஜை
    X

    ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணியை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

    புதிய ஆழ்துளைக் கிணறு அமைக்க பூமி பூஜை

    • சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார்
    • ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை மணவெளி தொகுதி தவளக்குப்பம் பகுதியில் தற்போது நிலவி வரும் குடிநீர் பற்றாக்குறையை போக்க புதுவை அரசு பொதுப்பணி த்துறை மூலம் தவளக்குப்பம் லக்கம் அவென்யூ பகுதியில் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

    இதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை கிராம குடிநீர் திட்ட உதவி பொறியாளர் பீனாரணி, இளநிலை பொறியாளர் சிவானந்தம், அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், உதவி பொறியாளர் நாகராஜ், இளநிலைப் பொறியாளர் அகிலன் மற்றும் அப்பகுதி முக்கிய பிரமுகர்கள், பா.ஜனதா தொகுதி தலைவர் லட்சுமிகாந்தன், மாவட்ட பொதுச் செயலாளர் சுகுமாரன் கிருஷ்ணமூர்த்தி ரெட்டியார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த ஆழ்துளை கிணறு திட்டத்தின் மூலம் சுமார் 5000 பேர் பயன்பெறுவார்கள்.

    Next Story
    ×