என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்
வங்கி மானேஜர் விஷம் குடித்து தற்கொலை
- கடன் தொல்லையால் முன்னாள் வங்கி மானேஜர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
- இவருக்கு யாஸ்மின் என்ற மனைவியும், ஒரு மகள் உள்ளனர்.
புதுச்சேரி:
கடன் தொல்லையால் முன்னாள் வங்கி மானேஜர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். புதுவை ஏம்பலம் அருகே பாக்கம் கூட்டுரோட்டை சேர்ந்தவர் அப்துல் பஷீர் அகமது (வயது38). இவருக்கு யாஸ்மின் என்ற மனைவியும், ஒரு மகள் உள்ளனர். தனியார் வங்கியில் உதவி மானேஜராக பணிபுரிந்து வந்த அப்துல் பஷீர் அகமது அந்த வேலை பிடிக்க வில்லை என்று வேலையை ராஜினாமா செய்து விட்டு ஜோதிடம் மற்றும் நாட்டு வைத்தியம் தொழில் செய்து வந்தார்.
இதற்கிடையே அப்துல் பஷீர் அகமது பலரிடம் கடன் வாங்கி வேல்ராம்பட்டு பகுதியில் மனை வாங்கி அதில் புதிய வீடு கட்டினார். இதனால் அப்துல் பஷீர் அகமதுக்கு கடன் தொல்லை அதிகமானது. கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு அப்துல் பஷீர் அகமதுக்கு நெருக்கடி கொடுத்து வந்தனர். இதனால் அவர் மன உளைச்சலில் இருந்து வந்தார். அவரது மனைவி யாஸ்மின் ஆறுதல் கூறி சமாதானம் செய்து வந்தார்.
இந்த நிலையில் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த அப்துல் பஷீர் அகமது திருக்காஞ்சியில் உள்ள சிவன் கோவில் அருகே விஷத்தை குடித்து மயங்கி கிடந்தார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அப்துல் பஷீர் அகமது பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து அவரது மனைவி யாஸ்மின் கொடுத்த புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






