என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
முதியோருக்கு ஆயுர்வேத சிகிச்சை முகாம்
- உளவியல் பிரச்சினைகள், நோய் தீர்க்கும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்கினர்.
- இதில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று சிகிச்சை பெற்றனர்.
புதுச்சேரி:
புதுவை அரசின் நலவழித்துறை சார்பில் ஆயுர்வேதத்தில் முதியோர் நலன் பாதுகாப்பு சிறப்பு முகாம் வில்லியனூர் மூலக்கடை சத்குரு ராம பரதேசி சித்தர் ஜீவ பீடத்தில் நடந்தது.
காலை 9 மணிக்கு தொடங்கிய முகாமில் இந்திய முறை மருத்துவம், ஹோமியோபதி மருத்துவத் துறை இயக்குனர் ஸ்ரீதரன், ஆயுர்வேத மருத்துவ அதிகாரி பத்மாவதமா ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர் முதியோர் நலன் பாதுகாப்பு, முதியோரை பாதுகாக்கும் காரணிகள், வயது முதிர்வால் ஏற்படும் பிரச்சினைகள், உளவியல் பிரச்சினைகள், நோய் தீர்க்கும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்கினர்.
மேலும் ஆயுர்வேதத்தில் முதியோர் பராமரிப்புக்கான குணப்படுத்தும் சிகிச்சைகள், பஞ்சகர்மா உட்பட பல சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. மதியம் 1 மணி வரை இந்த முகாம் நடந்தது. இதில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று சிகிச்சை பெற்றனர்.






