என் மலர்
புதுச்சேரி

தமிழ் சங்கத் தலைவர் முத்துக்கு விருது வழங்கிய காட்சி.
தமிழ்ச் சங்கத் தலைவருக்கு விருது
- தமிழ்ச் சங்கத் தலைவருக்கு குறள் நெறிக் காவலர் விருது வழங்கப்பட்டது.
- வி.முத்துவுக்கு குறள் நெறிக் காவலர் விருதினை தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் துணை வேந்தர்திருவள்ளுவன் வழங்கினார்.
புதுச்சேரி:
திருச்சி தமிழ்ச் சங்கத்தில் திருக்குறள் மாநாடு நடந்தது. மாநாட்டில் புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் வி.முத்துவுக்கு குறள் நெறிக் காவலர் விருதினை தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணை வேந்தர்திருவள்ளுவன் வழங்கினார்.
நிகழ்ச்சியில் துணை போலீஸ் சூப்பிரண்டு நந்தகோபால், திருக்குறள் புலவர் நாவை சிவம், பேராசிரியர் கடவூர் மணிமாறன், தமிழ்த்தாய் அறக்கட்டளை பொதுச் செயலாளர் உடையார்கோவில் குணா, கவிமாமணி துரை. ராசமாணிக்கம், துரைமுருகன், நெல்லை சுப்பையா, கவிஞர் தாமரைப்பூவண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story






