search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ஆவணி அவிட்டம் பூணூல் அணியும் நிகழ்ச்சி
    X

    திருபுவனையில் ஆவணி அவிட்டம் பூணூல் அணியும் நிகழ்ச்சி நடைபெற்ற போது எடுத்த படம்.

    ஆவணி அவிட்டம் பூணூல் அணியும் நிகழ்ச்சி

    • பூணூல் அணியும் திருவிழா நடைப்பெற்றது.
    • திருபுவனைபாளையம் நவசக்தி விநாயகர் கோவிலில் நடைப்பெற்றது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில விஸ்வகர்ம சமுகத்தினர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் மாநிலம் முழுவதும் பூணூல் அணியும் திருவிழா நடைப்பெற்றது. அதில் திருபுவனை தொகுதியில் உள்ள விஸ்வகர்ம சமுகத்தினர் பூணூல் அணியும் விழா திருபுவனைபாளையம் நவசக்தி விநாயகர் கோவிலில் நடைப்பெற்றது.

    விழாவிற்கு விஸ்வகர்ம சமூகத்தினர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக புதுவை மாநில விஸ்வகர்மா சங்க துணைத்தலைவர் சிங்காரம் கலந்துகொண்டு பூணூல் அணியும் விழாவை தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் புரோகிதர் பார்தீபன் அனைவருக்கும் பூணூல் அணிவித்து பிரசாதம் வழங்கி வாழ்த்தினார். நிகழ்ச்சியில் திருபுவனை தொகுதியை சேர்ந்த விஸ்வ கர்ம சமுக முன்னேற்ற சங்கத்தின் செயலாளர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டு பூணூல் அணிந்து சாமி தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    Next Story
    ×