search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ஆட்டோ டிரைவரை தாக்கி கொலை மிரட்டல்
    X
    கோப்பு படம்.

    ஆட்டோ டிரைவரை தாக்கி கொலை மிரட்டல்

    • அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.
    • ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டு ரகளை செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை சண்முகாபுரம் நாகாத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துக்குமரன் இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார்.

    இவரது மனைவி வினோதினி. இவர் மேட்டுப்பாளையத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.

    நேற்று இரவு இவர்களது வீட்டின் அருகே உள்ள விஜயா என்பவரின் மருமகன் விக்னேஷ் மற்றும் இவரது நண்பர்கள் பிரவீன்குமார் மற்றும் சுரேஷ் ஆகியோர் அதிக சத்தம்போட்டு பேசி பின்னர் ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டு ரகளை செய்தனர்.

    இதனை முத்துக்குமரன் தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த விக்னேஷ் மற்றும் அவரது நண்பர்கள் இருவரும் சேர்ந்து முத்துக்குமரனை தடியால் தாக்கினர். மேலும் முத்துக்குமரன் கண் புருவத்தை கடித்து விட்டனர். அதோடு தலையை சீவி கொலை செய்து விடுவோம் என்று மிட்டிவிட்டு சென்று விட்டனர்.

    இந்த தாக்குதலில் காயமடைந்த முத்துக்குமரன் கதிர்காமம் அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்தி ரியில் அனுமதிக்கப்பட்டர். இது குறித்து அவரது மனைவி வினோதினி கொடுத்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×