search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    அரசின் வருவாயை பெருக்க மதுக்கடைகளுக்கு ஏலம்-வைத்திலிங்கம் எம்.பி. அறிவுறுத்தல்
    X

    கோப்பு படம்.

    அரசின் வருவாயை பெருக்க மதுக்கடைகளுக்கு ஏலம்-வைத்திலிங்கம் எம்.பி. அறிவுறுத்தல்

    • இந்திய பொருளாதா ரத்தை சீர்குலைத்த அதானி பங்கு மோசடி குறித்து பாராளுமன்ற நிலைக்குழு விசாரணை நடத்த வேண்டும்.
    • மின்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் பிரீபெய்டு மீட்டரை மக்கள் விரும்புவதாக சொல்கிறார்.

    புதுச்சேரி:

    புதுவை காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் நிருபர்க ளிடம் கூறியதாவது:-

    இந்திய பொருளாதா ரத்தை சீர்குலைத்த அதானி பங்கு மோசடி குறித்து பாராளுமன்ற நிலைக்குழு விசாரணை நடத்த வேண்டும். பாராளு மன்றத்தில் ராகுல்காந்தி எழுப்பிய கேள்விகளுக்கு பிரதமர் மோடி எந்தவித பதிலும் அளிக்கவில்லை. பிரதமர் மோடியும், பா.ஜனதாவினரும் ராகுலின் கேள்விக்கு பயந்து தப்பியோடி ஒளிந்து கொண்டனர்.

    புதுவையிலும் அதானி குழுமம் கால் பதித்துள்ளது. காரைக்கால் துறைமுகத்தை அதானி குழுமம் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. மின்துறை தனியார்மயத்தில் அதானி, டாடா, வெளிநாட்டு நிறுவனங்கள் டெண்டர் கோரியுள்ளன. இதுபற்றி அரசு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.

    மின்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் பிரீபெய்டு மீட்டரை மக்கள் விரும்புவதாக சொல்கிறார். செல்போன் நிறுவனங்கள் போஸ்ட்பெய்டு, பிரீபெய்டு என 2 வழிமுறைகளை தருகிறது. விருப்பமான வழிமுறையை நாம் தேர்வு செய்ய முடியும். அதேபோல மின்துறையில் இத்திட்டத்துக்கு அரசால் விண்ணப்பம் கோர முடியுமா?

    தனியாரிடம் மின்துறையை தாரை வார்க்கும்நேரத்தில் எதற்கு பிரீபெய்டு மின் மீட்டர் திட்டத்தை கொண்டுவர வேண்டும்? 1991 முதல் கூட்டுறவு நிறுவனங்களை முதல்-அமைச்சர் ரங்கசாமி தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். இதனால் கூட்டுறவு நிறுவனம் அனைத்தும் நலிவடைந்து, சீர்குலைந்து போயுள்ளது. பாண்லே கூட்டுறவு பால் நிறுவனத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    பொதுமக்களுக்கு பால் கிடைப்பதை விட மது அதிகமாக தடையின்றி கிடைக்கிறது. தமிழகத்தில் பால் கொள்முதல் விலை அதிகமாக உள்ளது. புதுவையில் கொள்முதல் விலை குறைவாக உள்ளதால் உற்பத்தியாளர்கள் பாலை தர முன்வருவதில்லை.

    அதேநேரத்தில் பால் விற்பனை விலை தமிழகத்தைவிட புதுவையில் அதிகமாக உள்ளது. கூட்டுறவு நிறுவனங்களுக்கு, சங்கங்களுக்கு பல ஆண்டாக தேர்தல் நடத்தப்படவில்லை. கூட்டுறவு நிறுவனங்களை சீரமைக்கக்கோரி மத்திய மந்திரி அமித்ஷாவுக்கு கடிதம் அனுப்ப உள்ளேன்.

    வருமானத்தை பெருக்கவே ரெஸ்டோ பார் வழங்குவதாக முதல்-அமைச்சர் தெரிவிக்கிறார். ரெஸ்டோ பார்களில் விற்கப்படும் மதுக்களுக்கு கலால்வரி செலுத்தப்படுகிறதா? என்ற சந்தேகம் உள்ளது. ரெஸ்டோ பார்களுக்கு விற்பனை வரி விதிக்க வேண்டும்.

    வருமானத்தை பெருக்க வேண்டும் என கூறும் முதல்-அமைச்சர் மது கடைகளையும் சாராயம், கள்ளுக்கடைகள் போல ஏலம் விட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×