என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
கலெக்டரின் உதவியாளர் மீது தாக்குதல்
- முத்திரையர் பாளையத்தில் கலெக்டரின் உதவியாளர் மற்றும் அவரது மனைவியை வீடு புகுந்து தாக்கிய கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
- புதுவை முத்திரையர் பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பழனிவேல்
புதுச்சேரி:
முத்திரையர் பாளையத்தில் கலெக்டரின் உதவியாளர் மற்றும் அவரது மனைவியை வீடு புகுந்து தாக்கிய கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
புதுவை முத்திரையர் பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வர் பழனிவேல் (வயது49). இவர் கலெக்டரின் நேர்முக உதவியாளராக இருந்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அருண்குமார் என்பவருக்கும் ஏற்கனவே தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் பழனிவேல் தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தார். அப்போது அருண்குமார், அவரது தம்பி அஜித் மற்றும் அருண்குமாரின் மாமனார் மோகனசுந்தரம் ஆகியோர் பழனிவேலுவை வழிமறித்து மோட்டார் சைக்கிளில் எப்படி வேகமாக செல்லலாம் என கூறி தகராறு செய்தனர். இதில் இரு தரப்பினருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. பின்னர் பழனிவேல் வீட்டுக்கு வந்து விட்டார்.
அப்போது ஆத்திரம் தீராத அருண்குமார், அவரது தம்பி அஜித் மற்றும் மோகனசுந்தரம் ஆகிய 3 பேரும் பழனிவேலுவின் வீட்டுக்குள் அத்துமீறி புகுந்து அவரையும், அவரது மனைவியையும் கட்டையாலும், கல்லாலும் தாக்கி விட்டு சென்றனர்.
இந்த தாக்குதலில் தலை, முகத்தில் காயமடைந்த பழனிவேலு மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.
பின்னர் இதுகுறித்து பழனிவேலு மேட்டுப் பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அருண்குமார் மற்றும் அவரது தம்பி அஜித் மற்றும் அருண்குமாரின் மாமனார் மோகனசுந்தரம் ஆகிய 3 பேரையும் தேடி வருகிறார்கள்.






