என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மதுக்கடை தகராறில் கேஷியர் மீது தாக்குதல்
    X

    கோப்பு படம்.

    மதுக்கடை தகராறில் கேஷியர் மீது தாக்குதல்

    • அரியாங்குப்பம் சண்முகா நகர் ரத்னவேல் தெருவை சேர்ந்தவர் சூர்யா.
    • தவளக்குப்பத்தில் உள்ள மதுக்கடையில் கேஷியராக வேலை செய்து வருகிறார்.

    புதுச்சேரி:

    அரியாங்குப்பம் சண்முகா நகர் ரத்னவேல் தெருவை சேர்ந்தவர் சூர்யா. இவர் கடலூர்-புதுவை மெயின் ரோட்டில் தவளக்குப்பத்தில் உள்ள மதுக்கடையில் கேஷியராக வேலை செய்து வருகிறார்.

    இந்த கடையின் எதிரே தமிழக பகுதியான பெரியகாட்டு பாளையம் பகுதியை சேர்ந்த அரவிந்தன் என்பவர் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு கடைக்கு சென்றார். பின்னர் அரவிந்தன் மோட்டார் சைக்கிளை எடுக்க வந்தார். அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த மதுகடை கேஷியர் சூர்யாவுக்கும் அவருக்கும் தகராறு ஏற்பட்டது. இருவருக்கும் மோதல் ஏற்பட்டது.

    சூர்யாவை தரக்குறைவாக பேசிய அரவிந்தன் கையால் தாக்கி மிரட்டல் விடுத்தார். இது சம்பந்தமாக சூர்யா கொடுத்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்,

    Next Story
    ×