search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    அரசு துறைகளுக்கு 15 சட்ட ஆலோசகர்கள் நியமனம்-அமைச்சர் லட்சுமிநாராயணன்
    X

    கோப்பு படம்.

    அரசு துறைகளுக்கு 15 சட்ட ஆலோசகர்கள் நியமனம்-அமைச்சர் லட்சுமிநாராயணன்

    • அனைத்து அரசு துறைகளிலும் குறைந்தபட்சம் ஒரு சட்ட ஆலோசகரை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?
    • 15 சட்ட உதவியாளர்களை 2 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் கேள்விநேரத்தின்போது நடந்த விவாதம் வருமாறு:

    அசோக்பாபு(பா.ஜனதா):- அனைத்து அரசு துறைகளிலும் குறைந்தபட்சம் ஒரு சட்ட ஆலோசகரை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?

    அமைச்சர் லட்சுமிநாராயணன்:- ஏற்கனவே அரசு துறைகளில் 9 சட்ட அதிகாரிகள் உள்ளனர். மேலும் 15 சட்ட உதவியாளர்களை 2 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    அசோக்பாபு:- அரசு துறைகளில் வழக்குகள் அதிகமாகி வருகிறது. இதனால் ஒவ்வொரு துறைக்கும் தனியாக சட்ட ஆலோசகர் தேவைப் படுகிறது. இதை நேர்முக தேர்வு மூலம் வக்கீலை தேர்வு செய்வது சரியான நடைமுறையல்ல.

    லட்சுமிநாராயணன்:- ஐகோர்ட்டு சட்ட அதிகாரிகளை தேர்வு செய்ய சில விதிமுறைகளை தெரிவித்துள்ளது. அதன்படி தான் நேர்முகத்தேர்வு நடத்துகிறோம். இருப்பினும் முதல்-அமைச்சருடன் கலந்துபேசி தளர்வுகளை ஏற்படுத்தலாம்.

    நேரு:- அரசு சொத்துக்களை சிலர் அபகரித்து வைத்துள்ளனர். இதுதொடர்பாக நடவடி க்கை எடுக்க முடியாத நிலை உள்ளது. விரைவாக சட்ட ஆலோசகர்களை நியமிக்க வேண்டும்.

    அசோக்பாபு:- ஆட்சி அமைந்து 15 மாதம் ஆகிவிட்டது. இன்னும் அரசு வக்கீல், அரசு பிளீடர் நியமிக்கவில்லை. கடந்த ஆட்சியில் உள்ளவர்களே தொடர்கின்றனர். ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் வக்கீல்களை மாற்றுவதுதான் வழக்கம். எனவே உடனடியாக புதிய வக்கீல்களை நியமிக்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.

    Next Story
    ×