search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
    X

    கோப்பு படம்.

    அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

    • 24-ந் தேதி நடக்கிறது
    • 18-ந் தேதி காலை விக்னேஸ்வர பூஜை, பூர்ணாஹூதி, 19-ந் தேதி புண்யாஹாவாசனம், பஞ்சகவ்யம், நவக்கிரக ஹோமம், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடக்கிறது.

    புதுச்சேரி:

    புதுவை சின்ன சுப்புராயப்பிள்ளை வீதியில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில் திருப்பணிகள் முடிவடைந்து கும்பாபிஷேக விழா வருகிற 24-ந் தேதி நடக்கிறது.

    இதையொட்டி நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் விழா தொடங்குகிறது. 18-ந் தேதி காலை விக்னேஸ்வர பூஜை, பூர்ணாஹூதி, 19-ந் தேதி புண்யாஹாவாசனம், பஞ்சகவ்யம், நவக்கிரக ஹோமம், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடக்கிறது.

    20-ந் தேதி மூர்த்தி ஹோமம், திசா ஹோமம், மாலையில் வாஸ்துசாந்தி, அங்குரார்ப்பணம் நடக்கி றது. 21-ந் தேதி மாலை முதல்கால யாக பூஜை, 22-ந் தேதி காலை 2-ம் கால யாகபூஜை, மாலையில் 3-ம் கால யாக பூஜை, 23-ந் தேதி 4-ம் கால யாக பூஜை மாலை 5-ம்கால யாக பூஜை நடக்கிறது.

    24-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு 6-ம் கால யாக பூஜை, பரிவார மூர்த்திக ளுக்கு பூர்ணாஹூதி, கடம்புறப்பாடு நடக்கிறுது. 8.30 மணிக்கு அம்மன் ராஜகோபுரம், விமானங்கள், பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து அம்மனுக்கு மகா அபி ஷேகம், தீபாராதனை நடக்கிறது.

    விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, திருப்பணிக்குழு கவுரவ தலைவர் அமைச்சர் லட்சுமி நாராயணன், சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மற்றும் அமைச்சர்கள்,

    எம்.எல்.ஏ.க்கள் பங்கேற் கின்றனர்.

    Next Story
    ×