search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது
    X

    புதுவை சின்னசுப்புராயப்பிள்ளை வீதியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. இதையொட்டி இன்று 4-ம் கால யாகசாலை பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

    அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது

    • 4-ம் கால யாக பூஜை இன்று நடந்தது
    • 21-ந் தேதி மாலை முதல்கால யாக பூஜை, நேற்று காலை 2-ம் கால யாகபூஜை, மாலையில் 3-ம் கால யாக பூஜை நடந்தது.

    புதுச்சேரி:

    புதுவை சின்ன சுப்புராயப்பிள்ளை வீதியில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது.

    பிரசித்தி பெற்ற இக்கோவிலில் திருப்பணிகள் முடிவடைந்து கும்பாபிஷேக விழா நாளை வெள்ளிக்கிழமை நடக்கிறது.

    விக்னேஸ்வர பூஜையுடன் விழா தொடங்கியது. 18-ந் தேதி காலை விக்னேஸ்வர பூஜை, பூர்ணாஹூதி, 19-ந் தேதி புண்யாஹாவாசனம், பஞ்சகவ்யம், நவக்கிரக ஹோமம், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடந்தது.

    20-ந் தேதி மூர்த்தி ஹோமம், திசா ஹோமம், வாஸ்துசாந்தி, அங்குரார்ப்பணம் நடந்தது. 21-ந் தேதி மாலை முதல்கால யாக பூஜை, நேற்று காலை 2-ம் கால யாகபூஜை, மாலையில் 3-ம் கால யாக பூஜை நடந்தது. இன்று காலை 4-ம் கால யாக பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். மாலை 5-ம்கால யாக பூஜை நடக்கிறது. நாளை அதிகாலை 5 மணிக்கு 6-ம் கால யாக பூஜை, பரிவார மூர்த்திக ளுக்கு பூர்ணாஹூதி, கடம்புறப்பாடு நடக்கிறது. 8.30 மணிக்கு அம்மன் ராஜகோபுரம், விமானங்கள், பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து அம்மனுக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது.

    விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, திருப்பணிக்குழு கவுரவ தலைவர் அமைச்சர் லட்சுமி நாராயணன், சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மற்றும் அமைச்சர்கள்,எம்.எல்.ஏ.க்கள் பங்கேற் கின்றனர். விழா விற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×