என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது
- 4-ம் கால யாக பூஜை இன்று நடந்தது
- 21-ந் தேதி மாலை முதல்கால யாக பூஜை, நேற்று காலை 2-ம் கால யாகபூஜை, மாலையில் 3-ம் கால யாக பூஜை நடந்தது.
புதுச்சேரி:
புதுவை சின்ன சுப்புராயப்பிள்ளை வீதியில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது.
பிரசித்தி பெற்ற இக்கோவிலில் திருப்பணிகள் முடிவடைந்து கும்பாபிஷேக விழா நாளை வெள்ளிக்கிழமை நடக்கிறது.
விக்னேஸ்வர பூஜையுடன் விழா தொடங்கியது. 18-ந் தேதி காலை விக்னேஸ்வர பூஜை, பூர்ணாஹூதி, 19-ந் தேதி புண்யாஹாவாசனம், பஞ்சகவ்யம், நவக்கிரக ஹோமம், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடந்தது.
20-ந் தேதி மூர்த்தி ஹோமம், திசா ஹோமம், வாஸ்துசாந்தி, அங்குரார்ப்பணம் நடந்தது. 21-ந் தேதி மாலை முதல்கால யாக பூஜை, நேற்று காலை 2-ம் கால யாகபூஜை, மாலையில் 3-ம் கால யாக பூஜை நடந்தது. இன்று காலை 4-ம் கால யாக பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். மாலை 5-ம்கால யாக பூஜை நடக்கிறது. நாளை அதிகாலை 5 மணிக்கு 6-ம் கால யாக பூஜை, பரிவார மூர்த்திக ளுக்கு பூர்ணாஹூதி, கடம்புறப்பாடு நடக்கிறது. 8.30 மணிக்கு அம்மன் ராஜகோபுரம், விமானங்கள், பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து அம்மனுக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது.
விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, திருப்பணிக்குழு கவுரவ தலைவர் அமைச்சர் லட்சுமி நாராயணன், சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மற்றும் அமைச்சர்கள்,எம்.எல்.ஏ.க்கள் பங்கேற் கின்றனர். விழா விற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்