search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவை வேளாண்துறைக்கு ரூ.11 கோடி கூடுதல் நிதி
    X

    கோப்பு படம்.

    புதுவை வேளாண்துறைக்கு ரூ.11 கோடி கூடுதல் நிதி

    • கவர்னர் தமிழிசை வலியுறுத்தல்
    • சுய உதவிக் குழுக்களின் ஈடுபாட்டையும் ஒருங்கிணைந்த வேளாண் திட்டத்தையும் அரசு ஊக்கப்படுத்தி வருகிறது.

    புதுச்சேரி:

    புதுடெல்லியில் யூனியன் பிரதேசங்களின் கவர்னர்கள், நிர்வாகிகள் மாநாடு மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திரசிங் தோமர் தலைமையில் நடந்தது.

    இதில் காணொலியில் புதுவை கவர்னர் தமிழிசை பேசியதாவது:-

    புதுவை மாநில பொருளாதாரத்தின் முதுகெலும்பாக வேளாண்மை இருந்து வருகிறது. நகரமயமாதல், தொழிற்சாலை பெருக்கம், இதர சமூக பொருளாதார வர்ச்சி நடவடிக்கை களின் காரணமாக விளைநிலங்களை பாதுகாப்பது பெரும் சவாலாகவே இருந்து வருகிறது.

    இருப்பினும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாயிகளின் சமூக பொருளாதார நிலையை உயர்த்த நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. கடந்த 10 ஆண்டாக வேளாண்துறை சிறப்பான வளர்ச்சி பெற்று வருகிறது. 2030ம் ஆண்டுக்குள் வேளாண் உற்பத்தியை 2 மடங்காக உயர்த்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    புதுவை அரசு குறிப்பிட்ட பயிர்களுக்கு உற்பத்தி மானியம் வழங்கி வருகிறது. இதனால் 11 ஆயிரத்து 761 விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர். வேளாண்பொருள் உற்பத்தியில் சுய உதவிக் குழுக்களின் ஈடுபாட்டையும் ஒருங்கிணைந்த வேளாண் திட்டத்தையும் அரசு ஊக்கப்படுத்தி வருகிறது.

    மத்திய அரசின் வேளாண் திட்டங்களை முழுமையாக செயல்படுத்தி விவசாயிகளின் தேவைகளை பூர்த்தி செய்ய அனைத்து முயற்சிகளையும் புதுவை அரசு எடுத்து வருகிறது. மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் புதுவைக்கு 2023-24ம் ஆண்டுக்கான இடைக்கால ஒதுக்கீடாக ரூ.9 கோடியே 34 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது. புதுவை அரசின் முயற்சிக ளுக்கு உறுதுணையாக மத்திய நிதி ஒதுக்கீட்டின் கீழ் ரூ.11 கோடியே 45 லட்சம் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இந்த நிதி மத்திய அரசின் திட்டங்களை முழுமையாக செயல்ப டுத்தவும், விவசா யிகளை ஊக்கப்படுத்தவும் உதவும். மத்திய அமைச்சகத்தின் உதவியோடு புதுவையில் வேளாண் உற்பத்தி, விவசாயிகள் வாழ்வா தாரத்தை பாதுகாக்க முடியும்.

    இவ்வாறு தமிழிசை பேசினார்.

    Next Story
    ×