என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து தரப்படும்-சபாநாயகர் ஏம்பலம் செல்வம் உறுதி
    X

    மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பேசிய காட்சி.

    அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து தரப்படும்-சபாநாயகர் ஏம்பலம் செல்வம் உறுதி

    • புது காலனி பகுதியில் மக்கள் சந்திப்பு மற்றும் பொதுமக்கள் குறை கேட்பு கூட்டம் நடைபெற்றது.
    • ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் இலவச மனைபட்டா முழுமையாக வழங்கப்படவில்லை.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலம் மணவெளி தொகுதி நோணாங்குப்பம் புது காலனி பகுதியில் மக்கள் சந்திப்பு மற்றும் பொதுமக்கள் குறை கேட்பு கூட்டம் நடைபெற்றது. தொகுதி எம்.எல்.ஏ.வும் சபாநாயகருமான ஏம்பலம் செல்வம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குறைகளை கேட்டறிந்தார். கூட்டத்தில் அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

    இந்த பகுதியில் சுமார் 50 வருடங்களாக குடியிருந்து வருகிறோம். தாங்கள் வசிக்கின்ற பகுதியில் 100-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட மக்கள் குடியிருந்து வருகின்றனர். ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் இலவச மனைபட்டா முழுமையாக வழங்கப்படவில்லை.

    மேலும் தற்போது குடும்பங்கள் அதிகமாக உள்ள நிலையில் கூடுதலாக மனை பட்டா வழங்க இடம் தேர்வு செய்ய வேண்டும்.

    அத்துடன் அங்கு கல்வீடு கட்டுவதற்கான மானிய தொகையும் வழங்க வேண்டும். கழிவுநீர் சரிவர செல்லாமல் ஆங்காங்கே தேங்கி நிற்கின்றது. தடை இன்றி கழிவு நீர் செல்வதற்கு புதியதாக கழிவு நீர்வாய்க் கால்களை அமைத்துத் தரவேண்டும். சாலை வசதி மற்றும் கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். அதற்கு பதில் அளித்து சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பேசியதாவது:-

    இலவச மனை பட்டா வழங்கும் ஆய்வுகளில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரடியாக பயனாளிகளை தேர்வு செய்வார்கள். அதில் எவ்வித அரசியல் குறிக்கீடும் இருக்காது. இலவச மனை பட்டா பெறுவதற்கு தகுதியானவர்களை தேர்வு செய்த பிறகு பட்டா வழங்க ஆவன செய்யப்படும். மேலும் இந்த பகுதிக்கு புதியதாக சாலை அமைக்கும் பணி மற்றும் வாய்க்கால் அமைக்கும் பணிகள் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளது.

    இந்த ஆண்டு இறுதிக்குள் அந்த பணிகள் முடிவு பெற்று இந்த புதுகாலனி பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து தரப்படும்" என உறுதி அளித்தார். கூட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் அசோகன், அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், நல அதிகாரி மோகனா, இளநிலைப் பொறியாளர் சரஸ்வதி, வருவாய் ஆய்வாளர் பாலமுருகன் உள் ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×