search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ஏ.ஐ.டி.யூ.சி. பாசிக் ஊழியர்கள் போராட்டம்
    X

    ஏ.ஐ.டி.யூ.சி பாசிக் ஊழியர்கள் போராட்டம் நடத்திய காட்சி.

    ஏ.ஐ.டி.யூ.சி. பாசிக் ஊழியர்கள் போராட்டம்

    • 36-வது நாளான புதுவை சட்டசபை அருகே ஆம்பூர் சாலையில் போராட்டம் நடத்தினர்.
    • பாலமுருகன், ரஜினிகாந்த், ராஜீவ்காந்தி, கிருஷ்ணமூர்த்தி, பாண்டு மற்றும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    ஏ.ஐ.டி.யூ.சி பாசிக் ஊழியர்கள் 36 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    பாசிக் தொழிலா ளர்களுக்கு வழங்க வேண்டிய 114 மாத நிலுவை சம்பளத்தை வழங்க வேண்டும். ஊழியர்களுக்கு மாதம்தோறும் தொடர்ந்து சம்பளம் வழங்க வேண்டும். தினக்கூலி ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும். 6-வது ஊழியக்குழு பரிந்துரைபடி அனைத்து ஊழியர்களுக்கும் விடுபட்ட சம்பளம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    36-வது நாளான புதுவை சட்டசபை அருகே ஆம்பூர் சாலையில் போராட்டம் நடத்தினர்.

    போராட்டத்திற்கு பாசிக் ஊழியர்கள் முன்னேற்ற சங்க தலைவர் ரமேஷ், செயலாளர் முத்துராமன், பொருளாளர் தரணிராஜன் ஆகியோர் தலைமை வகித்தனர். ஏ.ஐ.டி.யூ.சி மாநில பொதுச்செயலாளர் சேதுசெல்வம் முன்னிலை வகித்தார்.

    போராட்டத்தில் பாசிக் சங்க நிர்வாகிகள் மூர்த்தி, கோவிந்தாராசு, மாணிக்கண்ணன், ராஜி, முருகன், தங்கமணி, குணசீலன், ராஜா, கண்ணம்மா, பாலமுருகன், ரஜினிகாந்த், ராஜீவ்காந்தி, கிருஷ்ணமூர்த்தி, பாண்டு மற்றும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×