search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு
    X

    இளைஞர் பெரு மன்றத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி

    அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு

    • அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த இளைஞர் பெரு மன்றம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • இந்திய இளைஞர்கள் அனைவருக்கும் நிரந்தர மற்றும் நிலையான வேலை வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும்.

    புதுச்சேரி:

    இந்திய இளைஞர்கள் அனைவருக்கும் நிரந்தர மற்றும் நிலையான வேலை வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும்.

    இந்திய ராணுவத்தில் ஒப்பந்த அடிப்படையில் வீரர்களை எடுக்கும் அக்னிபத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை என்ற வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். பல்வேறு அரசு நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் மறைமலையடிகள் சாலை சுப்பையா சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாநில தலைவர் பெருமாள் தலைமை தாங்கினார். செயலாளர் அந்தோணி முன்னிலை வகித்தார். சி.பி.ஐ. மாநில செயலாளர் சலீம், மாநில துணை செயலாளர் எழிலன், துணை தலைவர் எரிக்ரேம்போ, ரவீந்திரன், சசிதரன், பழனி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

    நிர்வாகிகள் சுகதேவ், ரஞ்சித், யசோதா, ராமசாமி, முருகன், சிவராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு அக்னிபத் திட்டத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

    Next Story
    ×