என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    தரமற்ற வாகன சீட்பெல்ட் விற்றால் நடவடிக்கை-போக்குவரத்து ஆணையர் எச்சரிக்கை
    X

    கோப்பு படம்.

    தரமற்ற வாகன சீட்பெல்ட் விற்றால் நடவடிக்கை-போக்குவரத்து ஆணையர் எச்சரிக்கை

    • மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.
    • பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கும் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    புதுச்சேரி:

    புதுவை போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், மத்திய மோட்டார் வாகன விதிகளின்படி வாகன சீட்பெல்ட் போன்ற முக்கிய பாகாப்பு உபகரணங்களின் தரம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    தரமற்ற சீட்பெல்ட், அலாரம் உட்பட ஆயிரத்து 300 உபகரணங்களை ஆன்லைனில் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இவற்றை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் ஆணையம் அறிவு றுத்தியுள்ளது.பாது காப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கும் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    எனவே தர மற்ற பாதுகாப்பு உபகரணங்களை விற்பனை செய்யக்கூடாது என வாகன விற்பனையாளர்களுக்கு உத்தரவிடப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×