என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்
கோழிக்கு விஷம் வைத்து கொன்ற போலீஸ்காரர்
- தவளக்குப்பத்தை அடுத்த பூரணாங்குப்பம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் பாலச்சந்தர்
- இவர் தனது வீட்டில் நாட்டுக் கோழிகளை வளர்த்து வருகிறார்.
புதுச்சேரி:
கோழிகளை விஷம் வைத்து கொன்றதாக போலீஸ்காரர் மீது புகார் கூறப்பட்டுள்ளது.
தவளக்குப்பத்தை அடுத்த பூரணாங்குப்பம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் பாலச்சந்தர் (வயது 34). இவர் தனது வீட்டில் நாட்டுக் கோழிகளை வளர்த்து வருகிறார். இதற்கிடையே அவர் வளர்த்து வந்த நாட்டுக்கோழிகள் மர்மமான முறையில் அவ்வப்போது இறந்தும், சில கோழிகள் மாயமாவதுமாக இருந்து வந்தது.
சில நாட்களுக்கு முன்பு இவர் வீட்டு அருகில் வசிக்கும் ஐ.ஆர்.பி.என். போலீஸ்காரர் சிவக்குமார் என்ற குமாரின் மகன்கள் பாலச்சந்தரின் 2 கோழி குஞ்சுகளை கொன்று விட்டனர். சிறுவர்கள் என்பதால் அவர்களை பாலசந்தர் கண்டு கொள்ள வில்லை. இந்த நிலையில் பாலசந்தருக்கு சொந்தமான கோழிக்குஞ்சுகள் மற்றும் கோழிகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த பாலச்சந்தர் தவளக்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரில் தனக்கு சொந்தமான கோழி மற்றும் கோழி குஞ்சுகளை ஐ .ஆர்.பி.என். போலீஸ்காரர் சிவக்குமார் விஷம் வைத்து கொன்று இருக்கலாம் என சந்தேகப்படுவதாக தெரிவித்தார். போலீஸ் உதவி- இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.






