என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
டாக்டரின் அறிவுரையை மீறி மது குடித்தவர் சாவு
- அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.
- சப்-இன்ஸ் பெக்டர் இளங்கோ வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
புதுச்சேரி:
புதுவை காலப்பட்டு அடுத்த பிள்ளைச்சாவடி திருக்குளம் வீதியைச் சேர்ந்தவர் குமரகுரு (வயது 47).
இவர் தொடர்ந்து மது குடித்து வந்த நிலையில் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவரது உறவினர்கள் மருத்துவ மனையில் சேர்த்தனர். தொடர் குடியால் அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டதை அறிந்த டாக்டர் இனிமேல் மது அருந்தக்கூடாது என குமரகுருவுக்கு அறிவுரை கூறினார். டாக்டர் கூறியதை ஏற்ற குமரகுரு கடந்த 3 மாதமாக மது அருந்தாமல் இருந்து வந்தார்.
இந்நிலையில் யாருக்கும் தெரியாமல் மது அருந்தி விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை மீட்டு காலாப்பட்டு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.
அவரை பரிசோ தித்த டாக்டர்கள் வரும் வழியி லேயே குமரகுரு இறந்து விட்டதாக கூறினார்.
இது குறித்து குமரகுருவின் மருமகன் ராஜசேகர் கொடுத்த புகாரின் பேரில் காலப்பட்டு சப்-இன்ஸ் பெக்டர் இளங்கோ வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.






