search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    அரசு சார்பு நிறுவன ஊழியர்கள் காத்திருக்கும் போராட்டம்
    X

    அரசு சார்பு நிறுவன ஊழியர்கள் சட்டசபை அருகே காத்திருப்பு போராட்டம் நடத்திய காட்சி.

    அரசு சார்பு நிறுவன ஊழியர்கள் காத்திருக்கும் போராட்டம்

    • புதுவை அரசு சார்பு நிறுவன ஊழியர்களின் கூட்டு போராட்டக்குழு உருவாக்கப்பட்டது.
    • போராட்டத்துக்கு கூட்டு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சேதுசெல்வம் தலைமை வகித்தார்.

    புதுச்சேரி:

    புதுவையில் பாசிக், பாப்ஸ்கோ, அமுதசுரபி உட்பட அரசு சார்பு நிறுவனங்களுக்கு ஆண்டுக்கணக்கில் சம்பளம் வழங்கப்படவில்லை.

    தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க வலியுறுத்தி தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.

    இதையடுத்து புதுவை அரசு சார்பு நிறுவன ஊழியர்களின் கூட்டு போராட்டக்குழு உருவாக்கப்பட்டது. இந்த குழுவினர் கோரிக்கை மாநாடு நடத்தினர்.

    மாநாட்டில் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பாக அரசு முத்தரப்பு குழு அமைக்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றினர்.

    தொடர்ந்து மாபெரும் கோரிக்கை பேரணியை தொழிலாளர்கள் நடத்தி முதலமைச்சரிடம் மனு அளித்தனர்.

    இந்த நிலையில் போராட்டத்தின் அடுத்த கட்டமாக பெருந்திரள் காத்திருப்பு போராட்டத்தை கூட்டு போராட்டக்குழு வினர் இன்று நடத்தினர்.சட்டசபை அருகே மிஷன் வீதி மாதாகோவில் எதிரே இந்த போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்துக்கு கூட்டு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சேதுசெல்வம் தலைமை வகித்தார்.

    பல்வேறு அரசு சார்பு நிறுவன சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் முத்து ராமன், ரமேஷ், ஜெயசங்கர், பிரபு, தரணிராஜன், தணிகை மலை, செங்குட்டுவன், துரை செல்வம், பாஸ்கர பாண்டி யன்கண்ணன், சண்முகம், யோகேஷ், கதிரேசன், முருகானந்தம், பிரேம் ஆனந்த், ராஜேந்திரன், திருக்குமரன் உட்பட பலர் முன்னிலை வகித்தனர்.

    போராட்டத்தை தொடங்கி வைத்து மாநில காங்கிரஸ் தலைவர் வைத்தி லிங்கம் எம்பி, எதிர்கட்சித்தலைவர் சிவா, இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம் ஆகியோர் பேசினர். ஏ.ஐ.டி.யூ.சி. கவுரவ தலைவர் அபிஷேகம், தலைவர் தினேஷ் பொன்னையா அரசு ஊழியர் சம்மேளனம் ஆனந்தராசன், மாதர்சங்கம் ஆசைத்தம்பி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    அரசு சார்பு நிறுவனங்க ளுக்கு நிலுவை சம்பளம் வழங்க வேண்டும். நிறுவ னங்களை திறந்து நடத்தி அரசு சார்பு நிறுவன ஊழி யர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

    Next Story
    ×