search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    வாலிபர்கள் மீது கொலைவெறி தாக்குதல்
    X

    கோப்பு படம்

    வாலிபர்கள் மீது கொலைவெறி தாக்குதல்

    • வாலிபர் பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    • மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த தகராறில் முன்விரோதம் இருந்து வந்தது.

    புதுச்சேரி:

    பூமியான்பேட்டையில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் வாலிபர் பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    புதுவை அரியாங் குப்பத்தை சேர்ந்தவர் பாலாஜி (வயது27). பெயிண்டர். இவருக்கும் பூமியான்பேட்டை பாவணன்நகரை சேர்ந்த முருகன் என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த தகராறில் முன்விரோதம் இருந்து வந்தது. அடிக்கடி இரு தரப்பினரும் பிரச்சினை செய்து வந்தனர்.

    இந்தநிலையில் முருகன் போன் செய்து பாலாஜியை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. அதற்கு பாலாஜி பதில் அளிக்கும் வகையில் முருகனின் மனைவியை அவதூறாக பேசியதாக தெரிகிறது.

    அப்போது முருகன் தைரியம் இருந்தால் நான் இருக்கும் இடத்துக்கு வா என்று அழைத்தார். அதற்கு சவால் விடுக்கும் வகையில் பாலாஜி நான் வந்தால் என்ன செய்ய முடியும்? சற்று நேரத்தில் நீ இருக்கும் இடத்தில் வருகிறேன் என்று கூறி தனது நண்பர்களான வேலா, சண்முகம் உள்பட 6 பேருடன் பூமியான்பேட்டைக்கு சென்றார்.

    அப்போது தயாராக இருந்த முருகன் மற்றும் அவரது கூட்டாளிகளான அப்பாஸ், கார்த்திக், ஐஸ் சதீஸ், குரு, சுந்தர் ஆகியோர் பாலாஜியையும், அவரது தரப்பை சேர்ந்தவர்களையும் இரும்பு பைப், பீர் பாட்டில் , தடி மற்றும் கல்லால் தாக்கினர். இதனை எதிர்பார்க்காத பாலாஜி தரப்பினர் பயந்து ஓட்டம் பிடித்தனர்.

    ஆனாலும், முருகன் மற்றும் அவரது கூட்டாளிகள் ஓட ஓட விரட்டி பாலாஜி தரப்பினரை சரமாரியாக தாக்கினர். இதில் பாலாஜி, வேலா, சண்முகம் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் 3 பேரும் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    இதில் வேலா ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ரெட்டியார்பாளையம் வழக்கு பதிவு செய்து முருகன் மற்றும் அவரது கூட்டாளிகளை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×