search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    வெறிச்சோடிய மதகடிப்பட்டு வாரச்சந்தை
    X

    வெறிச்சோடிய மதகடிப்பட்டு வாரச்சந்தையை படத்தில் காணலாம்.

    வெறிச்சோடிய மதகடிப்பட்டு வாரச்சந்தை

    • செவ்வாய்க்கிழமை தோறும் மாட்டுச் சந்தை நடைபெறும்
    • பல்வேறு கடைகள் வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும்.

    புதுச்சேரி:

    மதகடிப்பட்டு பகுதியில் செவ்வாய்க்கிழமை தோறும் மாட்டுச் சந்தை நடைபெறும். இந்த மாட்டு சந்தையையொட்டி காய்கறி, வேளாண் இடுபொருட்கள், மாடுக ளுக்கு தேவையான மூக்கனாங்கயிறு, கருவாடு வகைகள் என பல்வேறு கடைகள் வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும்.

    இங்கு விற்கப்படும் பொருட்களை புதுவை பகுதியில் இருந்தும், தமிழகப் பகுதியில் இருந்தும் அதிக அளவில் பொது மக்கள் வாங்கி செல்வார்கள். இதனால் செவ்வாய்க்கிழமை மதகடிப்பட்டு பகுதியில் பொதுமக்கள் அதிகளவில் கூடுவார்கள். இந்நிலையில் நேற்று இரவு முதல் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக இன்று நடை பெற்ற மாட்டுச்சந்தையில் மாடுகள் விற்பனைக்கு முற்றிலுமாக வரவில்லை. மேலும் கடைகளும் அப்ப குதியில் அமைக்கப்படாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.

    Next Story
    ×