என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    துரோகிகள் கூட்டம் காணாமல் போகும்-அன்பழகன் பேச்சு
    X

    விழாவில் நலத்திட்ட உதவிகளை மாநில செயலாளர் அன்பழகன் வழங்கிய போது எடுத்த படம்.

    துரோகிகள் கூட்டம் காணாமல் போகும்-அன்பழகன் பேச்சு

    • புதுவை கிழக்கு மாநிலம் சார்பில் உப்பளம் தலைமைக் அலுவலகத்தில் அ.தி.மு.க. 51-ம் ஆண்டு தொடக்க விழா நடந்தது.
    • தி.மு.க.வின் எண்ணப்படி அ.தி.மு.கவை பிளவுபடுத்த முயற்சித்த நயவஞ்சகர்களின் வஞ்சக செயலை தனது மதி நுட்பத்தால் வென்று ஜெயலலிதாவின் ஆட்சியையும், கட்சியையும் கட்டிக் காத்தவர் நம் இடைக்காலப் பொதுச்செயலாளர எடப்பாடியார் ஆவார்.

    புதுச்சேரி:

    புதுவை கிழக்கு மாநிலம் சார்பில் உப்பளம் தலைமைக் அலுவலகத்தில் அ.தி.மு.க. 51-ம் ஆண்டு தொடக்க விழா நடந்தது.

    அவைத் தலைவர் அன்பானந்தம் முன்னிலை வகித்தார். அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் கட்சி கொடி ஏற்றி, பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா திருவுருவ சிலை படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    விழாவில், மாநில செயலாளர் அன்பழகன் நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது:-

    தி.மு.க.வின் எண்ணப்படி அ.தி.மு.கவை பிளவுபடுத்த முயற்சித்த நயவஞ்சகர்களின் வஞ்சக செயலை தனது மதி நுட்பத்தால் வென்று ஜெயலலிதாவின் ஆட்சியையும், கட்சியையும் கட்டிக் காத்தவர் நம் இடைக்காலப் பொதுச்செயலாளர எடப்பாடியார் ஆவார்.நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பொய் வாக்குறுதிகளை கொடுத்து நம்மோடு இருந்த ஒரு சில துரோகிகள் துணையோடு தமிழகத்தில் தி.மு.க.வினர் ஆட்சி அமைத்தனர்.

    பின்னர் தி.மு.க.வின் எண்ணத்தை ஈடேற்ற அ.தி.மு.க. செயல்பாட்டை முடக்கம் செய்து பலவீனப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்ட ஒருசிலரின் செயலை அடியோடு ஒழித்து அ.தி.மு.க.வின் மதிப்பையும் மாண்பையும் எடப்பாடியார் கடின உழைப்பால் நிலை நாட்டப்பட்டது.

    ஓராயிரம் துரோகிகள் ஒன்று சேர்ந்துஅ.தி.மு.க.வை அழிக்க நினைத்தாலும் தொண்டர்களின் இரும்பு போன்ற விசுவாசம் என்ற அஸ்திரத்தை அசைக்க கூட முடியாமல் ஓ.பி.எஸ். தலைமையிலான துரோகிகள் கூட்டம் சில்லறை தேங்காய் போன்று காணாமல் போய்விடும்.

    தமிழகத்தில் எடப்பாடியார் தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி வெகு விரைவில் அமையும் போது பூலோக ரீதியில் தமிழகத்தோடு பின்னி பிணைந்துள்ள புதுவை மாநிலத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய இருவரின் புனித ஆட்சி மீண்டும் அமைய அ.தி.மு.க.வின் 51-வது ஆண்டு தொடக்க விழாவில் நாம் அனைவரும் சபதம் ஏற்போம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் மாநில ஜெயலலிதா பேரவை செயலாளர், முன்னாள் எம்.எல்.ஏ. பாஸ்கர், மாநில இணை செயலாளர்கள் வீரம்மாள், கணேசன், திருநாவுக்கரசு,.மாநில துணை தலைவர் ராஜாராமன், மாநில பொருளாளர் ரவிபாண்டுரங்கன், நகர செயலாளர் அன்பழக உடையார், மாநில துணைச் செயலாளர்கள் எம்.ஏ.கே. கருணாநிதி, கிருஷ்ணமூர்த்தி, காந்தி, கணேசன், நாகமணி, குமுதன், மேற்கு மாநில ஜெயலலிதா பேரவை செயலாளர் சுத்துக்கேணி பாஸ்கர், உழவர்கரை நகர செயலாளர் சித்தானந்தம், மாநில எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் பாண்டுரங்கன் , மேற்கு மாநில எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் சிவலயா இளங்கோ, மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி, மாநில மீனவர் அணி செயலாளர் ஞானவேல், மாநில இலக்கிய அணி செயலாளர் ராமசாமி நகர தலைவர்கள் செல்வகுமார், கணேஷ், சிவா, தொகுதி செயலாளர்கள் சிவகுமார், ஆறுமுகம்,பாஸ்கர், துரை, பொன்னுசாமி, கருணாநிதி, ராஜா, சம்பத், குணசேகர், கிருஷ்ணன்,, கமல் தாஸ், வேலவன், பொதுக்குழு உறுப்பினர்கள் ரவி, பாலன், சிவராமராஜா, செந்தில்முருகன், மாநில எம்.ஜி.ஆர்., மன்ற இணைச் செயலாளர்கள் கணேசன், அன்பழகன். துணைச் செயலாளர்கள் கணபதி, சத்தியமூர்த்தி, மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர்கள் வெங்கடேசன், பிரகாஷ், மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை தலைவர் பரசுராமன், துணை செயலாளர்கள் ராசு, கேசவன், மாநில சிறுபான்மை பிரிவு இணைச் செயலாளர்கள் ஜானிபாய், ரபீக், விவசாய அணி இணைச் செயலாளர் சிவக்குமார்,தொகுதி தலைவர்கள் காந்தி, சவுரிநாதன், மூர்த்தி, ஆறுமுகம், ராஜேந்திரன், சுரேஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×