என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    விமர்சையாக நடந்த மஞ்சுவிரட்டு
    X

    பாகூரில் நடந்த மஞ்சு விரட்டு நிகழ்ச்சியில், டிராக்டரில் சிறுமிகள், பெண்கள் பலர் ஏரி ஊர்வலம் வந்த காட்சி.

    .................

    விமர்சையாக நடந்த மஞ்சுவிரட்டு

    • பாகூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப்பகுதிகளில் பொது மக்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
    • முத்தாலம்மன் கோவில் சார்பில் நடந்த மஞ்சு விரட்டு நிகழ்ச்சி ‌விமர்சையாக நடந்தது. ஏராளமான வாகனத்தில் மாடவீதி வழியாக ஊர்வலம் விமர்சையாக நடைபெற்றது.

    புதுச்சேரி:

    பாகூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப்பகுதிகளில் பொது மக்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். பின்னர் மாடுகளை மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிக்கும் விவசாயத்திற்காக பயன்ப டுத்தப்படும் டிராக்டர், லாரி மற்றும் கார் இருசக்கர வாகனங்களை யும் அலங்கரித்து.

    அனைத்து கிராமத்திலும் மாடுகளை கோவில் வளாகத்திற்கு அழைத்து வந்து மஞ்சுவிரட்டு விமர்சையாக நடத்தினர். இதில் இளைஞர்கள், பெண்கள், சிறுவர்கள் என வாகனங்களில் ஏறிக்கொண்டு பொங்க லோ பொங்கல் என ஊர்வலமாக கிராமத்தை சுற்றி வந்தனர்.

    பாகூர் முத்தாலம்மன் கோவில் சார்பில் நடந்த மஞ்சு விரட்டு நிகழ்ச்சி விமர்சையாக நடந்தது. ஏராளமான வாகனத்தில் மாடவீதி வழியாக ஊர்வலம் விமர்சையாக நடைபெற்றது. இதைக்கான வெளியூர் மக்கள் வெளிநாட்டினர் கண்டு களித்தனர்.

    இந்த மஞ்சு விரட்டு ஊர்வலம் சுமார் 5மணிநேரத்திற்கு மேலாக நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர், பெண்கள், சிறுவர் பங்கேற்றதால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுக்க தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார் தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×