என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
கைதிகளை விடுவிக்க குழு அமைக்க வேண்டும் - தி.மு.க. வலியுறுத்தல்
- ஆயுள் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய அனைத்து மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
- மாநில அளவிலான கண்காணிப்பு குழு ஒன்றை நியமிக்கவும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.
புதுச்சேரி:
புதுவை சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் சிவா வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
நாட்டின் சுதந்திர தின 75-ம் ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மத்திய உள்துறை அமைச்சகம் நாடு முழுவதும் சிறையில் உள்ள ஆயுள் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய அனைத்து மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, மாநில அளவிலான கண்காணிப்பு குழு ஒன்றை நியமிக்கவும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. ஆனால் மத்திய அரசின் உத்தரவின்படி 75-ம் ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் புதுவையில் தகுதியான கைதிகளை விடுதலை செய்ய மாநில அரசு கண்காணிப்பு குழுவைக்கூட நியமிக்கவில்லை. இது சரியானது அல்ல.
எனவே 75-ம் ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் சிறை கைதிகளை விடுதலை செய்ய உடனடியாக மத்திய அரசின் உத்தரவின்படி மாநில அரசு கண்காணிப்புக்குழுவை அமைக்க வேண்டும். மேலும் சில தினங்களி லேயே அக்குழுவின் பரிந்துரையை பெற்று புதுவை சிறைக்கைதிகளை சுதந்திர தினத்திற்கு முன்பாக விடுதலை செய்ய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
மத்திய அரசின் உத்தரவின்படி கர்நாடகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கண்காணிப்பு குழு அமைத்து, அதன்பரிந்துரையின் அடிப்படையில் கைதிகளை ஆகஸ்ட் 15-ந் தேதி விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதுபோல் புதுவையிலும் சிறை கைதிகளை ஆகஸ்ட் 15-ந் தேதி விடுதலை செய்ய உரிய நடவடிக்கைகளை அரசு விரைந்து எடுக்க வேண்டும். அப்போது அரசியல் காரணங்களால் யாருடைய விடுதலையையும் ஆட்சியாளர்கள் தடுக்காமல், குழு பரிந்துரைக்கும் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்.
இவ்வாறு சிவா அறிக்கையில் கூறியுள்ளார்.






