search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுச்சேரியில் 54 பேருக்கு கொரோனா தொற்று
    X

    கோப்பு படம்

    புதுச்சேரியில் 54 பேருக்கு கொரோனா தொற்று

    • புதுவையில் 804 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
    • இதில் புதுவையில் 45, காரைக்காலில் 6, ஏனாமில் 3 பேர் என புதிதாக 54 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவையில் 804 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதுவையில் 45, காரைக்காலில் 6, ஏனாமில் 3 பேர் என புதிதாக 54 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 4, காரைக்காலில் 1, ஏனாம் 3, மாகியில் ஒருவர் என 9 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    புதுவையில் 691, காரைக்காலில் 119, ஏனாமில் 23, மாகியில் ஒருவர் என 834 பேர் தொற்றுடன் வீட்டு தனிமையில் உள்ளனர்.

    புதுவையில் 6, காரைக்கா லில் 29, ஏனாமில் 7 பேர் என 42 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினர்.

    மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 962 ஆக உள்ளது. புதுவையில் 2-வது தவணை, பூஸ்டர் டோஸ் உட்பட 17 லட்சத்து 56 ஆயிரத்து 183 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இத்தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    கொரோனா நெறி முறைகளை தொடரவும், அனைவரும் முக கவசம் அணியவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

    Next Story
    ×