search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தில் 5 ஆயிரம் பேருக்கு வேலை
    X

    கோப்பு படம்.

    தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தில் 5 ஆயிரம் பேருக்கு வேலை

    • அமைச்சர் லட்சுமிநாராயணன் தகவல்
    • தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் அமைய தேர்வு செய்யப்பட்ட இடத்தை ஐ.ஐ.டி. குழுவினர் பார்வையிட்டனர்.

    புதுச்சேரி:

    சென்னை ஐ.ஐ.டி. முதன்மை அதிகாரி சங்கர்ராமன், புதிய ஆய்வு பிரிவு தலைவர் ராஜேந்திரமேத்தா, கட்டிடக்கலை பிரிவு முதன்மை அதிகாரி ராபின்சன், பேராசிரியர் ரமேஷ்சிங், ஆலோசகர் சரவணசுந்தரம் அடங்கிய குழுவினர் கடந்த 23-ந் தேதி முதல்-அமைச்சர் ரங்கசாமியை

    சந்தித்தனர். அப்போது சென்னை ஐ.ஐ.டி. ஆராய்ச்சி மையத்தை புதுவையில் தொடங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. சேதராப்பட்டில் இதற்காக மையம் அமைத்தால் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சேதராப்பட்டில் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் அமைய தேர்வு செய்யப்பட்ட இடத்தை ஐ.ஐ.டி. குழுவினர் பார்வையிட்டனர். பின்னர், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணனுடன் ஆலோசனை நடத்தினார்.

    இதுகுறித்து அமைச்சர் லட்சுமிநாராயணன் கூறுகையில், புதுவையில் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் அமைக்க ஆலோசனை நடத்தினர்.

    அதன்படி முதல்-அமைச்சர் ரங்கசாமி ஓரிருநாளில் சென்னைக்கு சென்று ஐ.ஐ.டி. ஆராய்ச்சி மையத்தை பார்வையிட உள்ளார். புதுவையில் ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டால் 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றார்.

    Next Story
    ×