search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    குடிபோதையில் ரகளை செய்த 5 பேர் கைது
    X

    கோப்பு படம்.

    குடிபோதையில் ரகளை செய்த 5 பேர் கைது

    • திருக்கனூர்-நெட்டப்பாக்கம் பகுதியில் குடிபோதையில் ரகளை செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • அப்போது அங்கு ரகளையில் ஈடுபட்ட 2 வாலிபர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

    புதுச்சேரி:

    திருக்கனூர்-நெட்டப்பாக்கம் பகுதியில் குடிபோதையில் ரகளை செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மண்ணாடிப்பட்டு ஏரிக்கரை பகுதியில் 2 வாலிபர்கள் மது குடித்து விட்டு அவ்வழியே செல்லும் பொதுமக்களை மிரட்டி ரகளை செய்வதாக திருக்கனூர் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து உதவி சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு ரகளையில் ஈடுபட்ட 2 வாலிபர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் தமிழக பகுதியான பொம்பூரை அடுத்த இளையாண்டிபட்டு கிராமத்தை சேர்ந்த மோகன்(35) மற்றும் அதே பகுதியை சேர்ந்த குமார்(29) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    இதுபோல் நெட்டப்பாக்கம் அருக ஏரிப்பாக்கத்தில் சாராயக்கடை அருகே மது குடித்து விட்டு ரகளை செய்த ராகவன் பேட்டையை சேர்ந்த கலைவாணன் (30) மற்றும் மடுகரை-சிறுவந்தாடு சந்திப்பு ரோட்டில் மது குடித்து விட்டு ரகளை செய்த வளவனூர் அருகே ஆளையாம்பாளையத்தை சேர்ந்த செந்தில்(44) ஆகிய 2 பேரை நெட்டப்பாக்கம் போலீசார் கைது செய்தனர்.

    மேலும் மங்கலத்தில் மதுக்கடை அருகே மது குடித்து விட்டு போதையில் அவ்வழியே சென்ற பொதுமக்களை தகாத வார்த்தைகளால் திட்டி ரகளை செய்த கிளிஞ்சிக்குப்பம் புதுநகரை சேர்ந்த கடம்பாகுளம்(25) என்பவரை மங்கலம் போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×