search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கஞ்சா விற்ற 3 வாலிபர்கள்  கைது
    X

    கஞ்சா விற்ற வாலிபர்களையும், கைது செய்த போலீசாரையும் படத்தில் காணலாம்.

    கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது

    • அரியாங்குப்பம் பகுதியில் கஞ்சா புழக்கம் அதிகரித்து வருகிறது. இதனை கண்காணிக்க போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர்.
    • இதனை கண்காணிக்க போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர்.

    புதுச்சேரி:

    அரியாங்குப்பம் பகுதியில் கஞ்சா புழக்கம் அதிகரித்து வருகிறது. இதனை கண்காணிக்க போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர்.

    இந்த நிலையில் ஆர்.கே நகர் பகுதியில் உள்ள விளை யாட்டு மைதானம் அருகில் கஞ்சா விற்பதாக அரியாங் குப்பம் போலீசுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது. அதன் பேரில் நேற்று இரவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், சப்-இன்ஸ்பெக்டர் முருகா னந்தம் மற்றும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

    அங்கு சந்தேகப்படும் படியாக இருந்த 3 நபர்களை பிடித்து விசாரணை நடத்தி னர். அவர்கள் கஞ்சா பாக்கெட்டுகள் வைத்தி ருந்தது தெரியவந்தது.

    பிடிபட்ட 3 பேர்களை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அரியாங்குப்பம் பாரதி நகர் பகுதியை சேர்ந்த அருண், சுப்பையா நகர் சதீஷ் என்ற ராமலிங்கம், மணவெளி, அரவிந்தர் நகர் பகுதியைச் சேர்ந்த மணிபாரதி என்பதும் தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிட மிருந்து 200 கிராம் கஞ்சா பொட்ட லங்கள், 2 செல்போன், ஒரு பைக் பறிமுதல் செய்தனர். மேலும் முக்கிய குற்றவாளி யாக உள்ள கொலையாளி முகிலன், சரண் தலைமறை வாக உள்ளவர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×