என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மதுகுடித்து விட்டு ரகளை செய்த 3 பேர் கைது
    X

    கோப்பு படம்

    மதுகுடித்து விட்டு ரகளை செய்த 3 பேர் கைது

    • மதுகுடித்து விட்டு ரகளை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • இதுபற்றி தகவல் அறிந்ததும் பெரியக்கடை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை நேரு வீதி-கேண்டீன் வீதி சந்திப்பில் 2 பேர் மது குடித்து விட்டு அவ்வழியே செல்லும் பொதுமக்களை தகாத வார்த்தைகளால் திட்டி ரகளை செய்து கொண்டிருந்தனர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் பெரியக்கடை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு ரகளை செய்த 2 பேரையும் மடக்கி பிடித்தனர்.

    பின்னர் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் குயவர்பாளையம் டி.ஆர்.நகரை சேர்ந்த கமல்ராஜ்(வயது41) மற்றும் பழைய சாரம் பகுதியை சேர்ந்த குமார்(44) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டை பகுதியில் ஒருவர் குடிபோதையில் நின்றுக்கொண்டு தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த பெண்களை கிண்டல் செய்தார்.

    இதுபற்றி மேட்டுப்பாளையம் போலீ சாருக்கு தகவல் வந்தது. உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு பெண்களை கிண்டல் செய்த வரை மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில் அவர் முத்திரையர்பாளையம் காந்திதிருநல்லூர் வாட்டர் டேங்க் தெருவை சேர்ந்த மகாதேவா பாண்டா(42) என்பது தெரியவந்தது. இதையடுத்து மகாதேவா பாண்டாவை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×