என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவையில் 245 பேருக்கு கொரோனா
    X

    கோப்பு படம்

    புதுவையில் 245 பேருக்கு கொரோனா

    • புதுவையில் 2 ஆயிரத்து 861 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
    • புதுவையில் 195, காரைக்காலில் 49, மாகியில் ஒருவர் என புதிதாக 245 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவையில் 2 ஆயிரத்து 861 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

    இதில் புதுவையில் 195, காரைக்காலில் 49, மாகியில் ஒருவர் என புதிதாக 245 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

    புதுவையில் 18, காரைக்காலில் 3 பேர் என 21 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் ஆயிரத்து 33, காரைக்காலில் 143, ஏனாமில் 21 பேர், மாகியில் 2 பேர் என ஆயிரத்து 1199 பேர் தொற்றுடன் வீட்டு தனிமையில் உள்ளனர்.

    புதுவையில் 127, காரைக்காலில் 26, ஏனாமில் 7 பேர் என 160 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர்.

    மாநிலத்தில் கொ ரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 963 ஆக உள்ளது. புதுவையில் 2-வது தவணை, பூஸ்டர் டோஸ் உட்பட 17 லட்சத்து 66 ஆயிரத்து 330 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.

    இந்த தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    Next Story
    ×