என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்
புதுவையில் 245 பேருக்கு கொரோனா
- புதுவையில் 2 ஆயிரத்து 861 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
- புதுவையில் 195, காரைக்காலில் 49, மாகியில் ஒருவர் என புதிதாக 245 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
புதுச்சேரி:
புதுவையில் 2 ஆயிரத்து 861 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
இதில் புதுவையில் 195, காரைக்காலில் 49, மாகியில் ஒருவர் என புதிதாக 245 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
புதுவையில் 18, காரைக்காலில் 3 பேர் என 21 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் ஆயிரத்து 33, காரைக்காலில் 143, ஏனாமில் 21 பேர், மாகியில் 2 பேர் என ஆயிரத்து 1199 பேர் தொற்றுடன் வீட்டு தனிமையில் உள்ளனர்.
புதுவையில் 127, காரைக்காலில் 26, ஏனாமில் 7 பேர் என 160 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர்.
மாநிலத்தில் கொ ரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 963 ஆக உள்ளது. புதுவையில் 2-வது தவணை, பூஸ்டர் டோஸ் உட்பட 17 லட்சத்து 66 ஆயிரத்து 330 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.
இந்த தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Next Story






