search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பயங்கர ஆயுதங்களுடன் 2 ரவுடிகள் கைது
    X

    கோப்பு படம்.

    பயங்கர ஆயுதங்களுடன் 2 ரவுடிகள் கைது

    • நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
    • செல்போனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    வில்லியனூரில் கொலை சம்பவத்தை அரங்கேற்ற நண்பருடன் பதுங்கி இருந்த திருச்சியை சேர்ந்த பிரபல ரவுடியை போலீசார் கைது செய்து ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

    வில்லி யனூர் சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் வில்லியனூர் பகுதிகளில் ரோந்து சென்றனர். ஆரியப்பாளையம் அரசு சாராயக்கடை அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல் அளித்தனர். சந்தேகம் அடைந்த சப்-இனஸ்ப்பெக்டர் குமார் 2 பேரின் உடைமைகளை பரிசோதனை செய்ததில் பயங்கர ஆயுதங்களை வைத்திருந்தது தெரிய வந்தது.

    அதில் ஒருவர் பத்துக்கண்ணு அடுத்த ராமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த மதன்குமார் என்பதும், மற்றொருவர் திருச்சி பகுதி யைச் சேர்ந்த மதன்ராஜ் என்பதும் தெரியவந்தது.

    அவர்களிடம் விசாரணை நடத்தியதில் திருச்சியை சேர்ந்த மதன்ராஜ் மீது திருச்சி, கரூர் உள்ளிட்ட பகுதிகளில் கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளதும், வில்லியனூர் பகுதியில் அசம்பாவி தத்தை ஏற்படுத்த நண்பர் மதன்குமா ருடன் சேர்ந்து நேற்று இரவு பதுங்கி இருந்தது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார் ஆயுதங்கள் மற்றும் செல்போனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×