என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    10 ஆண்டு முடித்தவர்கள் பணி நிரந்தரம்-முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு
    X

    கோப்பு படம்.

    10 ஆண்டு முடித்தவர்கள் பணி நிரந்தரம்-முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு

    • சமீபத்தில் கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் தினக்கூலி ஊழியர்கள் பணிநிரந்தரம் செய்யப்பட்டனர்.
    • மனிதாபிமான அடிப்படையில் அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டியது நம் கடமை.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் பூஜ்யநேரத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் பேசியதாவது:-

    சமீபத்தில் கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் தினக்கூலி ஊழியர்கள் பணிநிரந்தரம் செய்யப்பட்டனர். அவர்கள் மாடியில் ஏறி தற்கொலை செய்வோம் என மிரட்டல் விடுத்த பின்பு பணி நிரந்தரம் கிடைத்தது.

    இதேபோல சொசைட்டி கல்லூரிகள், பொதுப்பணித்துறையிலும் ஆயிரக்கணக்கானோர் நிரந்தரமற்ற வேலையில் உள்ளனர். இவர்கள், நாங்களும் மாடியிலிருந்து குதிக்க வேண்டுமா? என கேட்கின்றனர். அவர்களுக்கும் பணி நிரந்தரம் குறித்து முதல்-அமைச்சர் சபையில் அறிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    இதற்கு பதிலளித்த முதல்-அமைச்சர் ரங்க சாமி, எதையும் ஒப்பிட்டு பேச வேண்டாம். அனைத்து துறைகளிலும் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டியவர்கள் உள்ளனர். மனிதாபிமான அடிப்படையில் அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டியது நம் கடமை.

    அரசு மருத்துவமனையில் கொரோனா காலத்தில் பணியாற்றினர் என்ற அடிப்படையில் பணி நிரந்தரம் செய்துள்ளோம். பொதுப்பணித்துறையில் ஆயிரத்து 100 பேரை ஒரே நேரத்தில் பணி நிரந்தரம் செய்துள்ளோம்.

    எனவே இந்த ஊழியர்கள் மீது அக்கறை உள்ளது. ரூ.5 ஆயிரம், ரூ.6 ஆயிரம் சம்பளம் வாங்கிக்கொண்டு பணி பாதுகாப்பில்லாமல் வேலையில் உள்ளனர். துறையில் காலி பணியி டம் ஏற்படும்போது கவனத்தில் கொண்டு அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். 10 ஆண்டுக்கு மேல் பணியில் உள்ளவர்கள் படிப்படியாக பணி நிரந்தரம் செய்யப்படு வார்கள். அந்தந்த துறைகளில் வாய்ப்பு ஏற்படும்போது நிரந்தரம் செய்வோம் என தெரிவித்தார்.

    Next Story
    ×